சீமானை கைது செய்யாதது ஏன்?
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட சீமானை, கொலை முயற்சி வழக்கில் நேற்று கைது செய்யப்போவதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நேற்றிரவு சீமான் கைது செய்யப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்.
சீமான் உள்பட ஒருசில திரையுலக பிரபலங்கள் நேற்று கைது செய்யப்பட்டு அவர்கள் அனைவரையும் பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். போராட்டங்களில் கைதாகும் அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால், சீமானை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால், சீமான் கைதாகலாம் என தகவல்கள் வெளியாகின.
சீமானை விடுவிக்காதவரை மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என பாரதிராஜா கூறினார். இந்நிலையில், சீமான், பாரதிராஜா, அமீர், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சீமானை கைது செய்வதால் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனை நேரிடும் என கருதியதால் சீமான் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.