ஜெயலலிதாவுக்காக ஏன் ஒரு இரங்கல் விளம்பரம் கூட வரவில்லை?
ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை பட்டதால் டீக்கடை வைத்திருந்தவர் முதல்வர் பதவியில் உட்கார்ந்துள்ளார். சாதாரணமாக இருந்தவர்கள் அதிமுகவில் பதவி பெற்று கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் முழுப்பக்கம் விளம்பரம், தோரணம், ப்ளக்ஸ் போர்டு என அவரால் லாபம் அடைந்தவர்கள் தங்கள் விசுவாசத்தை காட்டினார்கள் அல்லது காட்டுவது போல் நடித்தார்கள்
ஆனால் ஒரு எந்த ஒரு அதிமுக தலைவரும், அமைச்சரும் நிர்வாகிகளும் ஜெயலலிதாவுக்காக ஒரே ஒரு சின்ன விளம்பரம் கூட செய்யாதது ஏன் என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி கேட்கின்றனர்.
ஜெயலலிதாவால் சின்ன ஆதாயம் கூட பெறாத லட்சக்கணக்கான உண்மையான தொண்டர்கள் ஜெயலலிதாவின் மறைவுக்காக மொட்டை அடிப்பது, அஞ்சலி செலுத்துவது என உண்மையான அன்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் அமைச்சர்களின் நீலிக்கண்ணீர் தொண்டர்களை வெறுப்படைய செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.