shadow

மிருதன்: மிருகம் பாதி….மனிதன் பாதி கலந்த கலவை

miruthanகமல்ஹாசன் நடித்த ஆளவந்தான்’ படத்தில் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். அந்த படத்தில் கமல் கேரக்டரும் அதுபோலவே அமைந்திருக்கும். அதேபோல் ஜெயம் ரவி நடிக்கும் மிருதன் படம், மிருகம் பாதி, மனிதன் பாதி கலந்த கலவை என்று கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் ‘மிருதன்’ நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். மிருதன் என்றால் மிருகமும் மனிதனும் கலந்த கலவை என்றும் மிருகம் என்ற வார்த்தையின் முதல் இரண்டு எழுத்தும் மனிதன் என்ற வார்த்தையின் கடைசி இரண்டு எழுத்தும் சேர்ந்ததுதான் இந்த படத்தின் டைட்டில் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் குறைவு என்றும் இது முழுக்க முழுக்க ஆக்சன் பிரியர்களுக்கான படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹாலிவுட் கலைஞர்களுக்கு இணணயாக நம்மூர் மேக்கப்மேன்கள் மேக்கப் போட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply