shadow

மணிரத்னம் படம் தள்ளிப்போக உண்மையான காரணம் என்ன?
Mani Ratnam
மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ வெற்றிக்கு பின்னர் துல்கர் சல்மான், நானி, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கும் படம் ஒன்றை இயக்க அவர் திட்டமிட்டிருந்தார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்ற நிலையில், திடீரென இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் கேட்கும் தேதிகளில் நானியால் கால்ஷீட் தரமுடியவில்லை என்றும், இந்த படத்தின் திரைக்கதையில் மணிரத்னம் திருப்தி அடையாததால் இந்த படத்தை அவர் கைவிட்டதாகவும் பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து மணிரத்னம் அலுவலகத்தில் உள்ளவர்கள் கூறியபோது, “டிசம்பரில் படத்தைத் தொடங்கும் எண்ணம் இருந்தது, ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடங்கமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. படம் தாமதாகிறது. ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருக்கிறது. சார் இப்போது வெளியூரில் இருக்கிறார், அவர் சென்னை வந்தவுடன் எல்லாவற்றையும் முடிவுசெய்வோம் என்று கூறுகின்றனர்.

English Summary: Why Maniratnam’s next movie delayed?

Leave a Reply