சசிகலாவுக்கு செக் வைக்க தொடர் ரெய்டா? அரசியல் வட்டாரங்கள் பரபரப்பு
ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்தின் ஒரு துரும்பை அசைக்க முடியாத மத்திய அரசு, அவர் இறந்தபின்னர் இன்னொரு வலுவான தலைவர் உருவாகிவிட கூடாது என்பதற்காகவே அடுத்தடுத்து தொடர் ரெய்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ், தம்பிதுரை போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் கையில் அதிமுக இருந்தால்தான் தனது கைப்பாவையாக தமிழக அரசு செயல்படும் என்றும் சசிகலாவிடம் அதிகாரம் சென்றுவிட்டால் பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து வலிமையாக வாய்ப்பு இருப்பதாகவும் மோடி நினைத்துள்ளாராம்.
எனவே சசிகலாவுக்கு செக் வைக்கவே இந்த அதிரடி தொடர் ரெய்டு என்றும் இது இத்துடன் நிற்காமல் அடுத்தகட்டமாக சசிகலாவுக்கு நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.