shadow

ஹிட்லர் பிறந்து வளர்ந்த வீட்டை இடிப்பது ஏன்? ஜெர்மனி அமைச்சர் விளக்கம்

hitler2ஆம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்த ஹிட்லர் பிறந்து வளர்ந்த வீடு, ஆஸ்திரியா நாட்டில் பிரனவ் நகரில் உள்ளது. இந்த வீட்டை இடித்து தள்ள ஆஸ்திரிய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆஸ்திரியா நாட்டின் உள்துறை அமைச்சர் வோல்ப்காங் சொபோட்கா கூறியபோது ‘ஹிட்லர் வாழ்ந்த கட்டிடத்தை முழுமையாக மறுவடிவமைப்பு செய்ய வேண்டியதுள்ளதல் மட்டுமே இடிக்கவுள்ளதாகவும், அதுமட்டுமின்றி அந்த வீடு அங்கீகாரம் பெறுவதையும், அடையாளப்படுத்தப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்காகவே ஆஸ்திரிய அரசு ஒரு ஆணையத்தை நியமனம் செய்ததாகவும், அந்த ஆணையத்தின் முடிவின்பேரில்தான், ஹிட்லரின் வீட்டை இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹிட்லரின் வீடு நாஜி கட்சி ஆதரவாளர்களின் புனித தலம் போல மாறி வருவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்த முடிவை அந்த நாட்டின் பாராளுமன்றம் சட்டமாக இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஹிட்லரின் வீட்டை இடித்து தள்ள வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறும்போது, “ஹிட்லர் வாழ்ந்த வீடு, பாதுகாக்கப்பட வேண்டும். அவரோடு தொடர்புடைய ஒரு சில கட்டிடங்களில் இந்த கட்டிடம் ஒன்று என்பதால் இடித்து தள்ளிவிடக்கூடாது” என்கின்றனர்.

Leave a Reply