உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரையுலகின் முக்கிய வி.ஐ.பிக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தபோதிலும் விழா நாயகனாக ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும் விழாவுக்கு வராதது விழாக்குழுவினர்களை மட்டுமின்றி ரஜினிக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விழாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வராததால் அவருடைய வீடியோ பேட்டி மட்டும் மேடையில் உள்ள திரையில் ஒளிபரப்பப்பட்டது. லிங்கா படத்தின் பாடல்கள் மிகவும் இளமையாகவும் ரஜினிகாக ஸ்பெஷலாக உருவானதாக கூறிய ரஹ்மான், மோனோ காஸ்லினா பாடலை முதன்முதலாக லத்தீன் அமெரிக்க பாணியில் முயற்சித்துள்ளதாகவும், இந்த பாடல் தன்னுடைய பேவரேட் பாடல் என்றும் கூறினார்.
ஆனால் கடைசிவரை விழாவுக்கு அவர் வராததன் காரணத்தை அவர் தனது வீடியோ பேட்டியில் தெரிவிக்கவில்லை. விழாவில் உள்ள மற்றவர்கள் ரஹ்மானின் மிஸ்ஸிங் குறித்து வாய் திறக்கவில்லை. இதேபோல் ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் இந்த விழாவுக்கு வருவார் என கூறப்பட்டது. ஆனால் அவரும் வரவில்லை. இவர்கள் இருவரும் விழாவுக்கு வராததன் காரணம் கடைசிவரை யாருக்கும் புரியாத புதிராகவே விழா முடியாது.
Leave a Reply
You must be logged in to post a comment.