நடிகர் ஆனந்த்ராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார்?
பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் கடந்த 12 வருடங்களாக அதிமுகவில் இருந்து பணியாற்றிய நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவருடைய மொபைல் போனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும், இதுகுறித்து அவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ஆனந்த்ராஜ் கூறியபோது, ‘எனக்கு அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுத்திருக்க வாய்ப்பு இல்லை இல்லை. அப்படியே அவர்களில் யாரேனும் கொலை மிரட்டல் விடுத்திருந்தால் கட்சி தலைமை கண்டிக்கும் என்று எதிர்பார்கின்றேன்
முடிந்தால் கருணாநிதியை சந்திப்பேன் என்று நான் கூறியது அவரது வயதை கருத்தில் கொண்ட ஒரு மரியாதைதான். மற்றபடி இதில் வேறு உள்ளர்த்தம் எதுவும் வேண்டாம். இவ்வாறு ஆனந்த்ராஜ் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.