shadow

ஆர்.கே.நகர் வெற்றி யாருக்கு? உளவுத்துறை அறிக்கையால் சசிகலா அணி அதிர்ச்சி

ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெறுவதை அதிமுகவின் இரு அணிகளும் ஒரு தன்மான பிரச்சனையாகவே பார்க்கின்றனர். இந்த தேர்தலின் வெற்றிக்கு பின்னர்தான் இரு அணிகளும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையின் காயை நகர்த்த முடியும்

இந்நிலையில் டிடிவி தினகரனும், மதுசூதனனும் இரு அணியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து சமீபத்தில் உளவுத்துறை களத்தில் இறங்கி வேலை பார்த்து ஒரு அறிக்கையை தயார் செய்து சசிகலா அணி தலைமையிடம் கொடுத்துள்ளதாம்

அந்த அறிக்கையில் ஆர்.கே.நகரை பொருத்தவரையில் திமுகவுக்கும், ஓபிஎஸ் அணிக்கும்தான் போட்டி என்றும், டிடிவி தினகரனுக்கு மிகக்குறைந்த வாக்குகளே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளதாம். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிமுக சசிகலா அணி, தேர்தல் பிரச்சாரத்தின் வியூகங்களை மாற்ற உள்ளதாம்.

இந்த அறிக்கை ஓபிஎஸ் அணிக்கு கசிந்ததால், ஓபிஎஸ் அணியின் தரப்பு மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply