shadow

10சிம்புவுடன் குத்து, தனுஷுடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர் “குத்து ரம்யா”. இவர் கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

நடிகை ரம்யா, தனது வேட்புமனுவில், தந்தை என்ற இடத்தில் ஆர்.டி.நாராயணன் என்று நிரப்புயுள்ளார். இதை எதிர்த்து  சி.வெங்கடேஷ்பாபு என்பவர் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். நடிகை ரம்யாவின் உண்மையான அப்பா நான் தான். ஆர்.டி.நாராயணன் என்பவர் ரம்யாவை தத்து எடுத்தவர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். தந்தை என்ற இடத்தில் என்னுடைய பெயரை போடாமல், ஆர்.டி.நாராயணன் பெயரை ரம்யா நிரப்பியது மாபெரும் தவறு.

உண்மையான தந்தை நான் இருக்கும்போது வேறு பெயரை தந்தை என்ற இடத்தில் குறிப்பிடுவது சட்டப்படி தவறு. என்னை அவர் தந்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவருக்கு உண்மையான தந்தை யார் என்பதை வெளியுலகத்திற்கு ரம்யா விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், அவருக்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் ரம்யா கூறியுள்ளார்.

Leave a Reply