கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல வார இதழான குமுதம் ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என ஒரு கருத்துக்கணிப்பை எடுத்தது. அந்த கருத்துக்கணிப்பின் முடிவு சென்ற வாரம் வெளிவந்தது. இதில் அதிக வாக்குகள் பெற்று விஜய் இந்த பட்டத்தை கைப்பற்றியதாக முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும், ஒருசில ஊடகங்களிலும் இந்த கருத்துக்கணிப்பில் அஜீத் வெற்றி பெறும் நிலையில் இருந்ததாகவும், பின்னர் விஜய் தரப்பினர் இதில் தலையிட்டு முறைகேடான முறையில் முடிவை மாற்றி அமைத்ததாகவும் செய்திகள் வெளியிட்டன. ஆனால் விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆறு மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அஜீத் மன்றத்தலைவர்கள் கூடி பேசியதாகவும், குமுதம் இதழுக்கு தங்கள் கண்டனத்தை மாநில அளவில் ஒன்று சேர்ந்து தெரிவிக்கவேண்டும் என்றும் தேவைப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை எனினும் கோலிவுட் வட்டாரத்தில் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு கிடைக்கும் என்பதை அஜீத், விஜய் இருவருமே இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் அவரவர் தங்களுடைய படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில் அவர்களது ரசிகர்கள் ஏன் இந்த தேவையில்லாத வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று பொதுவான கருத்து உள்ளவர்கள் அதே சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.