shadow

sachin-maria1_0207getty_630இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகமே போற்றிப் புகழும் ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது சச்சின் தெண்டுல்கர்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு சச்சின்  என்றால் யார் என்பது தெரிந்திருக்கும் நிலையில் ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாகிய மரியா ஷரபோவா நேற்று அளித்த பேட்டி ஒன்றில் சச்சின் யாரென்றே தனக்கு தெரியாது என்று கூறியது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியை நேரில் கண்டுகளிக்க சச்சின் தெண்டுல்கர் தனது குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார். அனைத்து போட்டிகளையும் வி.ஐ.பிக்கள் வரிசையில் உட்கார்ந்து போட்டிகளை ரசித்து பார்த்து வருகிறார் தெண்டுல்கர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மரியா ஷரபோவா விளையாடிய போட்டி ஒன்றையும் அவர் பார்த்தார். அவருடன் பிரபல கோல்ப் வீரர் இயான் பௌல்டர்,  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டிராஸ் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் ஆகியோர்களும் போட்டியை ரசித்து பார்த்தனர்.

போட்டி முடிந்தது நிருபர்களிடம் பேசிய மரியா ஷரபோவா, தனது போட்டியை பார்க்க வந்திருந்த கால்பந்து வீரர் பெக்காமுக்கு தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். அப்போது நிருபர்கள் சச்சின் தெண்டுல்கரும் உங்கள் போட்டியை பார்த்தாரே? அவருக்கு உங்கள் நன்றி இல்லையா? என்று கேட்டதற்கு சச்சின் என்றால் யாரென்றே எனக்கு தெரியாது அவருக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சொல்ல்விட்டு மிக வேகமாக சென்றுவிட்டார். மரியாவின் இந்த பேட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விம்பிள்டன் போட்டி நடக்கும் லண்டனிலேயே சச்சினுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். போட்டி நடந்த மைதானத்திலேயே சச்சினிடம் பலர் ஆட்டோகிராப் வாங்கினர். இந்நிலையில் மரியாவின் பேட்டி அனைவரையும் ஆத்திரப்படுத்தியுள்ளது.

Leave a Reply