shadow

எந்த போராட்டம் என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் வைகோ, கருணாநிதி எங்கே?

உள்ளூர் போராட்டம் முதல் உலக போராட்டம் வரை வெற்றி பெற முதல் ஆளாக குரல் கொடுக்கும் வைகோ, மாணவர்களின் போராட்டம் விடிய விடிய நடந்த போதிலும் இன்னும் குரல் கொடுக்காதது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்துள்ளது. அவர் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றாரா? யாருக்காக பயந்து பதுங்கி இருக்கின்றார்? என்று இளைஞர்கள் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ், தமிழ்தான் என் மூச்சு என்று கூறும் கருணாநிதியிடம் இருந்து எந்த அறிக்கையும் வராதது ஏன்? என்றும் இளைஞர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.தன்னுடைய மகன், மகள், மருமகனுக்கு பதவி கேட்க டெல்லி வரை சென்றவர், இப்போது விடிய விடிய நடந்து வரும் போராட்டத்தை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்றும் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Leave a Reply