கத்திச்சண்டை ரிலீஸ் இப்போதைக்கு இல்லை. படக்குழு அறிவிப்பு
விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய ‘கத்திச்சண்டை’ திரைப்படம் நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், பணப்பற்றாக்குறை சீரடைந்த பின்னரே இந்த படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ‘கத்திச்சண்டை’ படக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகளவிலுள்ள அனைத்து தமிழ் ரசிகர்களும் கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ‘கத்திச்சாண்டை’ உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பணநெருக்கடியில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும்போது இப்படத்தை வெளியிடுவதை நியாயமற்ற செயலாக கருதுகிறோம். எனவே மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை படவெளியீட்டை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
விஷால் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரியர்கள் அனைவரும் இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். படம் வெளீயாகும்பொழுது கண்டிப்பாக ஒரு முழுமையான விருந்தாக அனைத்து ரசிகர்களுக்கும் அமையும். நன்றி
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.