கமல்ஹாசனும் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பு தற்போது வந்துள்ளது.
கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் மற்றும் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை சேர்ந்த ஜோய் பரூவா ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆல்பத்திற்கு அஸ்ஸாம் இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க, பாடலை எழுதியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன். தமிழ் மற்றும் அஸ்ஸாம் மொழி கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மியூசிக் ஆல்பம் இருமொழி ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்து வருகிறது.
இந்த பாடலை பாடியுள்ள ஸ்ருதிஹாசன் தனது முதல் பாடலை ஆறு வயதில் பாடியுள்ளார். இவரை போலவே அஸ்ஸாம் பாடகரும் தனது 4வது வயதிலேயே முதல் பாடலை பாடியுள்ளார். இருவருமே கலைக்குடும்பத்தில் இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த ஆல்பம் அஸ்ஸாம் மற்றும் தமிழ் மொழி ரசிகர்கள் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாடலை கீழேயுள்ள விடியோவில் நாம் இப்போது பார்க்கலாம்.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1lCXs4l” standard=”//www.youtube.com/v/-44kxx19Emc?fs=1″ vars=”ytid=-44kxx19Emc&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep5581″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.