எஃப்.ஐ.ஆரி.,ல் அப்படியா இருக்கு? செய்தியாளர்களிடம் பதற்றத்துடன் கேட்ட தினகரன்!
தேர்தல் கமிஷனுக்கு புரோக்கர் மூலம் லஞ்சம் கொடுத்து இரட்டை இலையை குறுக்கு வழியாக பெற முயற்சி செய்ததாக டிடிவி தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா என்பவருடன் டிடிவி தினகரன் பேசிய போன் ரிகார்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் அடையாறில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுகேஷ் சந்திரா என்பவர் யாரென்றே எனக்கு தெரியாது. நான் லஞ்சம் கொடுத்ததாக டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன். என் சித்தி சசிகலாவை பார்க்க பெங்களூர் செல்ல தயாராகி கொண்டிருந்த போதுதான் எனக்கு விஷயமே தெரிந்தது. நான் போனில் யாரிடமும் பேசவில்லை என்று கூறினார்
அப்போது செய்தியாளர்கள் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவுடன் போனில் நேரடியாக நீங்கள் பேசியதாக செய்தி வந்துள்ளதே என்று கூறியதற்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் செய்தியாளர்கள் விடாமல் உங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரிலேயே அப்படி தான் உள்ளது என்று கூறியவுடன் அதிர்ச்சியான தினகரன், ‘அப்படியா! எஃப்.ஐ.ஆரில் வேறு என்ன உள்ளது? என்று திரும்பத் திரும்ப பதற்றத்துடன் கேட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.