சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர் ஏற்பட்ட நிலை தெரியுமா? கமல், ரஜினிக்கு அமைச்சர் கேள்வி
தமிழகத்தில் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைத்து சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர்கள் கட்சி என்ன நிலைமை ஆனது தெரியுமா என்று அமைச்சர் செல்லூர் ராஜூ, ரஜினி மற்றும் கமலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் இன்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ரஜினி, கமல் போன்று யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். தமிழக மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் என்ன செய்தார்கள்? சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர் கடை ஆரம்பித்து ஏற்பட்ட நிலைமையை ரஜினி, கமல் அறிய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தமிழக அரசியல் நிலைமை நன்றாக உள்ளது, முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ மேலும் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.