மத்திய அமைச்சர் சசிதரூர் நேற்று டெல்லி ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் கணவரின் கள்ளக்காதல் காரணமாக மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை பிரேதபரிசோதனை அறிக்கையை டெல்லி மருத்துவர்கள் வெளியிட்டனர். அதில் சசிதரூர்மனை விசுனந்தா, தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும், அவர் உடலில் சிலகாயங்கள் இருந்ததாகவும், ஆனாலும் அவருடைய மரணம் எதனால் நிகழ்ந்தது என்பதை இன்னும் ஒரு முக்கிய அறிக்கைக்கு பிறகே உறுதியாக சொல்ல முடியும் என்றும் தெரிவித்தனர். மேலும் சுனந்தாமன உளைச்சல் காரணமாக அளவுக்கு அதிகமாக மனஉளைச்சல் தடுப்பு மருந்துகளை உட்கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமாலை சுனந்தாவின் உடலுக்கு அவரது மகன் சிவ்மேனன் தீமூட்டினார். இன்று அவருடைய சாம்பலை ஹரித்துவாரில் கரைக்க உள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்துவரும் போலீஸார் சசிதரூர் டெல்லி திரும்பியதும் அவரிடம் விசாரணை செய்யமுடிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் பெண்பத்திரிகையாளரிடமும் விசாரணை செய்யப்படும் என்று போலீஸார் கூறினர்.

Leave a Reply