ரஜினியின் ஏமாற்றம் இதுதான்: அதிர்ச்சி தகவல்

நேற்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் பேட்டியளித்த ரஜினிகாந்த் ’அனைத்து விஷயங்களும் சுமூகமாக சென்று கொண்டிருப்பதாகவும் ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தனக்கு ஏமாற்ற இருந்ததாகவும், அந்த ஏமாற்றம் என்ன என்பது குறித்து காலம் வரும்போது சொல்வதாகக் கூறினார்

இது குறித்து ஒரு சில ஊடகங்கள் மற்றும் நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் ஏமாற்றம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. மாவட்ட செயலாளர்களிடம் தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்த வேண்டும் என்ற ஒரு டார்கெட்டை ரஜினி வைத்துள்ளதாகவும் ஆனால் எந்த ஒரு மாவட்ட செயலாளரும் அதற்கு தீவிரமாக வேலை செய்யவில்லை என்றும் அதனால் தான் ரஜினிக்கு ஏமாற்றம் என்றும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்

ஆனால் அதே நேரத்தில் மாவட்ட செயலாளர்கள் சிலர் சுயநலமாக செயல்பட்டு வருவதால் தான் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாகவும் ஒரு செய்தி கூறுகின்றது. இருப்பினும் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றம் என்ன என்பதை அவரே கூறினால்தான் அது உண்மையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply