shadow

FICCIஒரு நிறுவனத்தில் ஊழியர்களை தேர்வுசெய்யும்போது அந்த நிறுவனங்கள் என்னென்ன திறமைகளை எதிர்பார்க்கின்றன என்ற விவரங்களை சி.ஐ.ஐ. மாநாட்டில் தொழிலதிபர்கள் பட்டியலிட்டனர். புதியதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த பட்டியல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) மேலாண்மை கல்வி தொடர்பான 2 நாள் மண்டல மாநாட்டை நேற்று சென்னையில் தொடங்கியது. இந்த மாநாட்டை ஃபிக்கி துணை தலைவரும், ஃபோர்ப்ஸ் மார்ஷல் நிறுவனத்தின் இயக்குநருமான நவ்ஷத் ஃபோர்ப்ஸ் தொடங்கிவைத்து, பணியாளர்களை தேர்வு செய்யும்போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய திறமைகளை பட்டியலிட்டார்.

1. முதலில் பணியாளர்களின் அடிப்படை தகுதிகள், பின்னணி, குறிப்பிட்ட துறையில் பெற்றுள்ள நிபுணத்துவம்

2. பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் பெற்றுள்ளார்களா?

3. சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமை இருக்கிறதா?

4.பல்வேறு தரப்பினருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதால் குழு உணர்வு இருக்கிறதா என்பது மிகவும் முக்கியம்

5. ஆராய்ச்சி மனப்பான்மை

இத்தகைய திறமை உள்ளவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்துவிடும். ஆனால் இந்த திறமைகள் பாடப்புத்தக்கத்தில் இருந்து பெற முடியாது. அனுபவம் மற்றும் பொது அறிவு ஆகியவற்றின் மூலமே இவற்றை பெற முடியும்

இந்த மாநாட்டில்முருகப்பா குழுமத்தின் துணைத்தலைவர் எம்.எம்.முருகப்பன் பேசும்போது, “இன்றைய காலத்தில் தெருவோர வியாபாரம் முதல் மிகப்பெரிய வணிகம் வரை அனைத்தும் உலகமயமாகிவிட்டது. இத்தகைய சூழலில் ஏற்படும் பிரச்சினைகளை கையாளக்கூடிய திறமை அவசியம். புதுமையாக சிந்திக்கும் வகையில் அதற்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பது கல்வி நிறுவனங்களின் கடமையாகும். சுயமாக தெரிந்து கொள்ளும் திறனை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, சிஐஐ தென்மண்டல கல்வி துணைக்குழு தலைவர் சி.ஆர்.சுவாமி நாதன் மாநாட்டுக்கு வந்தவர்களை வரவேற்றார். சென்னை பிசினஸ் ஸ்கூல் இயக்குநர் ஜெ.என்.அம்ரோலியா நிறைவுரை நிகழ்த்தினார். மாநாட்டில், மேலாண்மைக் கல்லூரி பேராசிரியர்கள், எம்பிஏ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாடு இன்று (12-ம் தேதி) நிறைவடைகிறது.

Leave a Reply