shadow

ஃபாலோ ஆன் ஆனது மேற்கிந்திய தீவுகள். இந்திய பவுலர்கள் அபாரம்

cricket1மேற்கிந்திய தீவுகள் அணியுடன் முதல் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் போட்டியை விளையாடி வரும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆன மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 566 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 243 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட்டி 74 ரன்களும், டெளவிரிச் 57 ரன்களும் எடுத்தனர். இந்திய பவுலர்கள் யாதவ் மற்றும் ஷமி தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். மிஸ்ரா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

முதல் இன்னிங்ஸில் 323 ரன்கள் பின்தங்கி இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

Leave a Reply