மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட். இந்தியா 500 ரன்கள் குவிப்பு
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. 304 ரன்கள் மேற்கிந்திய தீவு அணி பின்தங்கியுள்ளதால் இந்த போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
3வது ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 125 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்திருந்த நிலையில் நேற்று 4வது ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய அணியின் ரஹானேவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 9 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இன்று ஒருநாள் மீதமிருக்கும் நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பத்து விக்கெட்டுக்களையும் இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினால் இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு அதிகர்ம்
Leave a Reply
You must be logged in to post a comment.