மதுரை கே.கே.நகரை சேர்ந்த ஸ்ரீபிரியா ரெங்கராஜன் என்பவர் ஐ.ஏ.ஸ் தேர்வில் வெற்றி பெற்று மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றினார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்த அவர் தொடர்ந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஸ்ரீபிரியா நேற்று மரணமடைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மரணம் அடைந்த ஸ்ரீபிரியாவுக்கு லஜபதிராய் என்ற கணவரும், அகிலன் ராய், கயல்ராய் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். லஜபதிராய் ஐகோர்ட் வழக்கறிஞராக உள்ளார்.
ஸ்ரீபிரியாவின் உடலுக்கு ஐகோர்ட் நீதிபதி டி.அரிபரந்தாமன், மதுரை முன்னாள் கலெக்டர் சகாயம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.