shadow

images (5)

மன உறுதியுடன் செயல்புரிந்து வெற்றி பெறும், மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், ராகு, சந்திரன் நற்பலன் தருவர். உயர்ந்த செயல்புரிந்து, புகழ் பெறுவீர்கள். பேசும் வார்த்தையின் வசீகரம், புதிய நட்பினை பெற்றுத்தரும். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். வாகன பயன்பாடு சீராக இருக்கும். புத்திரருக்கு, சத்து நிறைந்த உணவு உண்ண தருவீர்கள். எதிர்ப்பாளர் இடம் மாறுகிற நன்னிலை உண்டு. இல்லறத் துணையின் கூடுதல் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். அதிக உழைப்பினால், தொழில் வளர்ச்சி பெறும். பணியாளர்கள், நேர்த்தியுடன் செயல்படுவீர்கள். பெண்கள், தியாக மனதுடன் குடும்ப நலன் பேணுவர். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றுவர்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால், தொழில் வளம் பெறும்.

நல்ல கொள்கைகளை விரும்பி பின்பற்றும், ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசியில், ஆட்சி பெற்ற சுக்கிரன், லாப ஸ்தானத்தில் கேது அனுகூல அமர்வில் உள்ளனர். திட்டமிட்ட காரியம் நிறைவேற அதிக பணிபுரிவீர்கள். சொல்லும், செயலும் நேர்த்தியாகும். சமூக நிகழ்வு புதிய அனுபவம் தரும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். புத்திரரின் விருப்பத்தை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெறும். இல்லறத் துணை, உங்கள் அறிவுரையை கேட்பார். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். பணியாளர்கள், மனதில் உற்சாகம் கொள்வதால், பணி எளிதாக நிறைவேறும். பெண்கள், தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், அதிக பயிற்சியால் உரிய தேர்ச்சி பெறலாம்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால், மனதில் சாந்தம் வளரும்.

நட்பின் உன்னதம் போற்றி மகிழ்ந்திடும், மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ராகு, கேது தவிர மற்ற கிரகங்கள், வியத்தகு அளவில் நற்பலன் தருவார். எண்ணமும், செயலும் ஒருங்கிணைந்து வெற்றியை உறுதியாக்கும். பேச்சில் நிதானம் இருக்கும். அரசு சார்ந்த உதவி பெறலாம். பிணி தொந்தரவு குறையும். புத்திரர் விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள். இல்லறத் துணை, நல்ல ஆலோசனை சொல்வார். தொழிலில் வளர்ச்சிப்பணி இனிதாக நிறைவேறும். பணியாளர்களுக்கு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பெண்கள், புத்தாடை அணிகலன் வாங்க யோகம் உண்டு. மாணவர்கள், பொது அறிவில் மேம்படுவர்.

பரிகாரம்:
அஷ்டலட்மியை வழிபடுவதால், பணவரவு கூடும்.

உழைப்பில் ஆர்வமும், தியாக மனமும் கொண்ட, கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன், ராகு அதிக நற்பலன் தருவர். முயற்சி நல்ல விதமாக அமைந்து, கூடுதல் நன்மை கிடைக்கும். கால்நடை வளர்ப்பு, விவசாயம் சிறந்து விளங்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். புத்திரர், சில விஷயங்களில் அதிருப்தி மனதுடன் செயல்படுவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, புதியவர்களின் வருகை துணை நிற்கும். பணியாளர்கள், நன்மதிப்பு பெறுவர். பெண்கள், இயன்ற அளவு பணம் சேமிப்பர். மாணவர்கள், நண்பருடன் அதிக அன்பு பாராட்டுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால், செயல் வெற்றி பெறும்.

துணிந்த மனமும், செயல்திறனும் கொண்ட, சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சந்திரன் மட்டுமே முழு அளவில் நற்பலன் தருவார். உங்கள் சொல்லை உறவினர், நண்பர் ஏற்றுக்கொள்வர். முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றவும். வாகன பயன்பாடு சுமாரான அளவில் இருக்கும். புத்திரரின் செயல்குறையை, இதமான அணுகுமுறையால் சரிசெய்யவும். காலமுறை உணவுப்பழக்கம், உடல்நலம் காக்கும். இல்லறத் துணையின் உடல்நலத்திற்கு, மருத்துவ சிகிச்சை உதவும். தொழிலில் குறைந்த அளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை தவறாமல் பின்பற்றவும். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், பாதுகாப்பற்ற இடங்களில் செல்லக்கூடாது.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வழிபடுவதால், துன்பம் விலகும்.

அன்பின் மகிமையை உணர்ந்து பின்பற்றும், கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, தர்ம கர்ம அதிபதிகளான சுக்கிரன், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். குருவும், சனியும் அதிக நற்பலன் தருவர். அதிர்ஷ்ட தேவதையின் அருள் பார்வை கிடைக்கும். உற்சாக செயலில் முக்கியமான பணி நிறைவேறும். செல்வ வளம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர், கூடுதல் அன்பு பாராட்டுவர். வாகன பயணம் இனிதாகும். புத்திரர் விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள். எதிரியின் மனதில் நல்ல மாற்றம் வரும். இல்லறத் துணை, அன்பின் வழி நடப்பார். தொழில், வியாபாரம் அபரிமிதமாக முன்னேற்றம் பெறும். பணியாளர்கள், இலகுவாக பணிபுரிவர். பெண்கள், கலை அம்சம் நிறைந்த பொருளை வாங்குவர். மாணவர்கள், காலத்தை பொன்போல கருதுவர்.

சந்திராஷ்டமம்: 18.4.15 நள்ளிரவு 12:01 மணி முதல், 20.4.15 இரவு 9:14 மணி வரை.

பரிகாரம்:
குபேரரை வழிபடுவதால், பணவரவு கூடும்.

கலை ரசனையுடன் பணிபுரிந்து பாராட்டு பெறுகின்ற, துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு கேது, சுக்கிரன் அளப்பரிய வகையில் நற்பலன் தருவர். ஆன்மிக அருள் பலம், மனதில் புதிய நம்பிக்கையை உருவாக்கும். பேசுவதில் நிதானம் நல்லது. உடன்பிறந்தவர், உதவி கேட்டு அணுகுவர். வெளியூர் பயணம், பயன் அறிந்து மேற்கொள்ளவும். புத்திரரின் செயல் சிறப்பாக அமைய உதவுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். இல்லறத் துணை, குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் இதம், பதமாக செயல்படவும். பணியாளர்கள், பணச்செலவில் சிக்கனம் பின்பற்றவும். பெண்கள், அமைதியான வாழ்வு நடத்துவர். மாணவர்கள், புதிய கலை கற்பதில் ஆர்வம் கொள்வர்.

சந்திராஷ்டமம்: 20.4.15 இரவு 9:15 மணி முதல், 22.4.15 நள்ளிரவு 2:53 மணி வரை.

பரிகாரம்: சூரியனை வழிபடுவதால், சில நன்மை கிடைக்கும்.

எந்த சூழ்நிலையையும் பக்குவ மனதுடன் ஏற்கும், விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு செவ்வாய், குரு, ராகு அதிக நற்பலன் தருவர். சூரியன், புதன், ‘புத ஆதித்ய’ யோக பலன்களை வழங்குவர். அறிவுத்திறன் மேம்படும். சொந்த பந்தங்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பூர்வ சொத்தில் பணவரவு அதிகரிக்கும்.
புத்திரரின் செயல், பெருமையை தேடித்தரும். எதிர்ப்பாளர் இடம் மாறுவர். இல்லறத் துணையின் நல்ல குணத்தை உணர்வதால், ஒற்றுமை வளரும். தொழில் வளர, அனுகூல காரணி பலம் பெறும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், சோம்பல் குணம் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம்:
22.4.15 நள்ளிரவு 2:54 மணி முதல், 25.4.15 காலை 10:56 மணி வரை.


பரிகாரம்:
சனீஸ்வரரை வழிபடுவதால், மனக்குழப்பம் தீரும்.

உற்சாகமுடன் உழைத்து, வாழ்வில் முன்னேறும், தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, நவக்கிரகங்களில் சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவார். சுயலாபம் பெற உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் விலகவும். உடன்பிறந்தவர்களை குறை சொல்லி பேச வேண்டாம். வீடு, வாகன பாதுகாப்பில் அதிக கவனம் அவசியம். தகுதிக்கு மீறிய பணப்பொறுப்பு ஏற்கக் கூடாது. புத்திரரின் உடல்நலத்திற்கு சிகிச்சை உதவும். இல்லறத் துணையின் மனதில் நம்பிக்கையை வளருங்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். பணியாளர்கள், பணம் கடன் பெறுவதில் நிதானம் பின்பற்றவும். பெண்கள், சகிப்பு தன்மையுடன் குடும்ப நலன் பேணுவர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.

சந்திராஷ்டமம்: 25.4.15 காலை 10:57 மணி முதல், அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்:
பெருமாளை வழிபடுவதால், குடும்ப ஒற்றுமை பலம் பெறும்.

நல்ல கருத்துகளை முழு மனதுடன் ஏற்கும், மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு கேது, புதன், சுக்கிரன், குரு, சனி அதிக நற்பலன் தருவர். குடும்பத்தில் ஒற்றுமை மிகுந்திருக்கும். ஆன்மிக வழிபாடு நடத்துவீர்கள். நண்பரால் உதவி கிடைக்கும். எதிர்மறையாக இருந்த செயல், சில நன்மையை தரும். புத்திரர், நற்செயல்களால் பெருமை தேடித்தருவர். நிலுவைப் பணம் வசூலாகும். இல்லறத் துணை, குடும்ப நலன் பாதுகாத்திடுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணம் சேமிப்பீர்கள். பணியாளர்கள், தெளிந்த மனதுடன் பணிபுரிவர். பெண்கள், புத்தாடை, அணிகலன் வாங்க நல்யோகம் உண்டு. மாணவர்கள், நண்பரின் நல்ல கருத்தினை ஏற்பர்.

பரிகாரம்
: அய்யப்பன் வழிபாடு, மனதில் புதிய ஞானம் தரும்.

சிறிய நன்மையையும் பெரிதென போற்றி மகிழும், கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய், சுக்கிரன் நற்பலன் தருவர். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும். எதிர்ப்பாக இருந்த சூழல் விலகும். உடன் பிறந்தவர் உங்கள் சொல்லை மதித்து செயல்படுவர். வாகனத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். புத்திரர் மனதில் தைரியம் வளர உதவுங்கள். உடல் நல ஆரோக்கியம் சீராக இருக்கும். வெளியூர் பயணம், பயன் அறிந்து மேற்கொள்ளவும். இல்லறத் துணையின் நற்செயல், மன மகிழ்ச்சியை தரும். அதிக உழைப்பினால், தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேறும். பணியாளர்கள் கண்ணும், கருத்துமாக பணிபுரிவர். பெண்களுக்கு, தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், தனித்திறன் வளர்த்துக் கொள்வர்.

பரிகாரம்:
துர்க்கையம்மன் வழிபாடு, சகல நன்மையும் தரும்.

பணிகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படும், மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் சுக்கிரன், ஐந்தில் குரு அனுகூல அமர்வில் உள்ளனர். மனக்குழப்பம் தவிர்ப்பதால், குறித்த காலத்தில் பணி நிறைவேறும். நண்பரின் ஆலோசனை, ஊக்கம் தரும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். அடுத்தவர் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம்.
புத்திரர் அதிக அன்பு, பாசம் கொள்வர். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். இல்லறத் துணை, உங்கள் எண்ணங்களை செயல் வடிவமாக்குவார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். பணியாளர்கள், கடமையை உணர்ந்து செயல்படுவர். பெண்கள், சமையலறை பணியில் உரிய பாதுகாப்பை பின்பற்றவும். மாணவர்கள், நண்பர் கருத்தில் உண்மையை உணர்ந்து பேசவும்.

பரிகாரம்: அன்னை மீனாட்சி வழிபாடு, குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும்.

Leave a Reply