shadow

images (5)

எதிர்கால நலனை மனதில் வைத்து செயல்படும், மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம் சுக்கிரன், ராகு அதிக நற்பலன் தருவர். செவ்வாய், சுக்கிரன், குரு, ராகுவின் பார்வை, விருச்சிக ராசியில் உள்ள சனி மீது பதிகிறது. இதனால், அஷ்டமச் சனியின் தாக்கம் பெருமளவில் குறையும். முக்கிய பணிகளில் சில நிறைவேறும். மனதில் நம்பிக்கை, தைரியம் வளரும். கண்களில் மலர்ச்சி உண்டாகும். வாகன பயன்பாடு அதிகரிக்கும். புத்திரரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். குளறுபடியான செயல்கள் சரியாகும். இல்லறத்துணை, உங்களின் கவுரவம் வளர உதவுவார். தொழிலில் வளர்ச்சி, வருமானம் கூடும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், கடமையை உணர்ந்து செயல்படுவர். மாணவர்களுக்கு, ஆசிரியரின் அறிவுரை, மனதில் நல்மாற்றம் தரும்.

பரிகாரம்:
பைரவரை வழிபடுவதால், புதிய நன்மை கிடைக்கும்.

பிறர் நலன் சிறக்க அக்கறையுடன் உதவும், ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், சந்திரன், கேது நற்பலன் தருவர். நடை, உடை, செயலில் வசீகர மாற்றம் ஏற்படும். இடம் அறிந்து பேசுவது நல்லது. அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும். புத்திரர் மனதில் நம்பிக்கையை வளருங்கள். எதிர்ப்புகளால் வரும் சிரமத்தை சரிசெய்வீர்கள். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணம் பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். பணியாளர்கள், தொழில்நுட்ப அறிவில் மேம்படுவர். பெண்கள், பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. மாணவர்கள், புதியவர்களை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம்:
11.4.15 நள்ளிரவு 12:01 மணி முதல் 12.4.15 காலை 9:33 மணி வரை

பரிகாரம்: அஷ்டலட்சுமியை வழிபடுவதால், பணவரவு சீராகும்.

சந்தோஷ நிகழ்வுகளை பொக்கிஷமாக கருதும், மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ராகு, கேது, தவிர மற்ற கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். சுயகவுரவம் பாதுகாக்கும் வகையில் செயல்படுவீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம்பெறும். அரசு உதவி கிடைத்து, மனதில் நம்பிக்கை வளரும். புதிய வாகனம் வாங்க பணவரவு கிடைக்கும். புத்திரர், உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வர். வழக்கில் சுமுகத்தீர்வு கிடைக்கும். இல்லறத்துணை, கருத்து வேற்றுமை கொள்வார். தொழிலில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். பணியாளர்களுக்கு, பணசேமிப்பு கூடும். பெண்கள், வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்கள், நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 12.4.15 காலை 9:34 மணி முதல் 14.4.15 மதியம் 2:06 மணி வரை

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால், குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும்.

உலக நடப்புகளை அறிவதில் ஆர்வமுள்ள, கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு குரு, சனி, கேது, செவ்வாய் தவிர, மற்ற கிரகங்கள் அனுகூல பலன் தருவர். வாழ்வில் முன்னேற, அதிர்ஷ்டகரமான வாய்ப்பு வரும். நல்ல முயற்சி, முழு அளவில் வெற்றியை தரும். உடன் பிறந்தவர் நல்அன்பு பாராட்டுவர். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புத்திரர் அறிவு, வேலைத்திறனில் முன்னேற்றம் அடைவர். உடல் நலம் ஆரோக்கியம் பெறும். இல்லறத்துணை, உதவிக்கரமாக இருப்பார். தொழில், வியாபாரத்தில் உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு, சலுகை உண்டு. பெண்கள், உறவினர் குடும்ப மங்கல நிகழ்ச்சிக்கு உதவுவர். மாணவர்கள், மனம், செயலில் புத்துணர்வு பெறுவர்.

சந்திராஷ்டமம்: 14.4.15 மதியம் 2:07 மணி முதல் 16.4.15 மதியம் 2:53 மணி வரை

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால், செயலில் வெற்றி கிடைக்கும்.

முயற்சியினால் முன்னேற்றம் பெறுகின்ற, சிம்ம ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவார். பிறர் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டாம். குடும்பத்திற்கான பணத்தேவை அதிகரிக்கும்.
வெளியூர் பயணம், பயன் அறிந்து மேற்கொள்ளவும். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மை விலக்குவதால், முக்கியமான பணி நிறைவேற்றலாம். புத்திரரின் உடல்நலத்திற்கு சிகிச்சை உதவும். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். இல்லறத்துணையின் செயல்குறையை விமர்சிக்க வேண்டாம். லாப விகிதம் குறைப்பதால், தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். பணியாளர்கள், கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்படவும். பெண்கள், பணச்செலவில் சிக்கனம் பின்பற்றவும். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.

சந்திராஷ்டமம்: 16.4.15 மதியம் 2:54 மணி முதல் 18.4.15 மாலை 5:28 மணி வரை

பரிகாரம்:
ஹயக்கிரீவரை வழிபடுவதால், மனக்குழப்பம் தீரும்.

முக்கியமான செலவினங்களுக்கு முன்னுரிமை தரும், கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு புதன், குரு, சுக்கிரன், சனி நற்பலன் தருவர். கால்நடை வளர்ப்பில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர் அதிக பாசம் கொள்வர். வீடு, வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. பணியாளர்கள், மனநிம்மதியுடன் பணிபுரிவர். புத்திரர், நல்ல செயல்களால் பெருமை தேடித்தருவர். பித்தம், கபம் உடலில் கூடுவதால் பிணி ஏற்படலாம். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதியவர்களின் வருகை துணை நிற்கும். பெண்கள், பிரார்த்தனை நிறைவேறி வழிபாடு நடத்துவர். மாணவர்கள், படிப்பில் எளிய பயிற்சிமுறையை அறிந்து கொள்வர்.

சந்திராஷ்டமம்:
18.4.15 மாலை 5:29 மணி முதல் அன்று நாள் முழுவதும்

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால், சகல நன்மையும் கிடைக்கும்.

நீதி, நேர்மை குணம் மன உறுதியுடன் பின்பற்றும், துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மற்றும் சந்திரன் மட்டுமே இந்த வாரம் நற்பலன் தருவர். சமூகத்தில் பெற்ற நற்பெயரை கவனத்தில் கொண்டு செயல்படுவீர்கள். பேசுவதில் நிதானம், சில நன்மையை தரும். அலைச்சல் என்று கருதுகிற பயணத்தை தவிர்த்திடுங்கள். புத்திரர், சில விஷயங்களில் குழப்பம் அடைவர். எதிர்ப்பாளரின் கெடு செயலை, தெய்வ வழிபாட்டின் மூலம் சரி செய்யுங்கள். இல்லறத்துணையின் ஆலோசனை, நம்பிக்கை தரும். கூடுதல் கண்காணிப்பு உழைப்பினால் தொழில், வியாபாரம் சீராகும். இயந்திரப்பிரிவு பணியாளர்கள், தவறாமல் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவும். பெண்களுக்கு, தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபடக் கூடாது.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால், துன்பம் விலகும்.

நல்ல கருத்துகளை முழு மனதுடன் பின்பற்றும், விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு கேது, சுக்கிரன், சனி பகவான் தவிர மற்ற கிரகங்கள், வியத்தகு அளவில் நற்பலன் தருவர். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். நற்செயல் புரிந்து நன்மதிப்பு, பாராட்டு பெறுவீர்கள். இடையூறு விலகி, புதிய பாதையில் நடை போடுவீர்கள். உடன்பிறந்தவர் உதவுவர். வாகன பயணம் இனிதாக அமையும். புத்திரர், ஆன்மிக கருத்து அறிவதில் ஆர்வம் கொள்வர். இல்லறத்துணை மனதில், நம்பிக்கைக்கு குறை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு, தாமதமான சலுகை வந்து சேரும். குடும்ப பெண்கள், உறவினர் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள், அதிக பயன் தராத பொருளை வாங்க வேண்டாம்.

பரிகாரம்: அன்னை மீனாட்சியை வழிபடுவதால், குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

பணி சிறக்க அறிவுத்திறனை பயன்படுத்தும், தனுசு ராசிக்காரர்களே!

நவக்கிரகங்களில் சந்திரன் தவிர மற்ற கிரகங்கள், எதிர்மறை பலன்களை தருவர். நிகழ்வுகளின் போக்கு உணர்ந்து, பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பணச்செலவு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கிலேசம் ஏற்படும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரரின் சேர்க்கை சகவாசத்தை கண்காணிப்பது அவசியம். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். இல்லறத்துணையின் பேச்சு, செயல் குளறுபடியாகும். தொழில், வியாபாரத்தில் லாப விகிதம் குறைப்பதால் உற்பத்தி, விற்பனை சீராகும். பணியாளர்கள், பணியிடத்தில் பிற விவாதம் பேச வேண்டாம். பெண்கள், குடும்ப நலனில் கூடுதல் அக்கறை கொள்வர். மாணவர்கள், நிதானம் பின்பற்றவும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால், கஷ்டம் நீங்கி நன்மை ஏற்படும்.

தெய்வ வழிபாடுகளில் ஆர்வமுள்ள, மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு செவ்வாய், சூரியன், ராகு தவிர, மற்ற கிரகங்கள் அளப்பரிய நன்மை தருவர். ஆன்மிக நம்பிக்கை வளரும். உடன்பிறந்தவர் கூடுதல் அன்பு, பாசம் கொள்வர். குடும்பத்தின் தேவையை தாராள பணச்செலவில் பூர்த்தி செய்வீர்கள். பெண் தெய்வ அருள்பலம், பலவித நன்மையை உருவாக்கும். எதிரி, மறைமுகமாக உதவி பெற முயற்சிப்பர். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பண சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்றுக் கொள்வர். பெண்கள், இயன்ற அளவில் தான, தர்மம் செய்வர். மாணவர்களுக்கு, கலைகளில் ஆர்வம் வளரும்.

பரிகாரம்: ராம பிரானை வழிபடுவதால், மனதில் சாந்தம் நிலைத்திருக்கும்.

மனதில் கருணை, செயலில் பொறுமை நிறைந்த, கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய், சுக்கிரனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. புதிய திட்டம் நிறைவேற, முருகப்பெருமானின் நல்லருள் பலம் துணை நிற்கும். சமூகத்தில் அந்தஸ்து பெருகும். உடல்நலம் ஆரோக்கியம் பெறும். வீடு, வாகனத்தின் பயன்பாடு, மனதில் நிம்மதி தரும். புத்திரர், இனம் புரியாத குழப்பம் அடைவர். எதிர்ப்பாளர் விலகுவர். இல்லறத்துணை வழியில் புதிய சொந்தங்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை படிப்படியாக முன்னேற்றம் பெறும். பணியாளர்கள், அதிக பொறுப்புணர்வை பின்பற்றவும். பெண்கள், பணம் சேமிப்பர். மாணவர்கள், படிப்பில் புதிய பயிற்சி முறையை பின்பற்றுவர்.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால், குடும்பத்தில் ஒற்றுமை கூடும்.

நிகழ்வுகளின் போக்கு உணர்ந்து செயல்படும், மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தேவகுரு வியாழன், அசுர குரு சுக்கிரன் இவர்களுடன் சந்திரனும் நற்பலன் தருவார். நற்குணம், நற்செயல் உள்ளவர்களின் உதவி, ஆசி கிடைக்கும். பணிகளில் முழு மனதுடன் ஈடுபடுவீர்கள். அதிக பயன் தராத பொருளை, நிர்பந்தத்தின் பேரில் வாங்க வேண்டாம். சேமிப்பு பணம் செலவாகும். புத்திரர், நண்பருக்கு இணையாக பழகுவர். உடல் ஆரோக்கியம் பெற, மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத்துணை ஒற்றுமை கொள்வார். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை சரி செய்வீர்கள். பணியாளர்கள், எதிர்கால நலனை கருத்தில் கொள்வர். பெண்கள், காலமுறை உணவுப் பழக்கத்தை பின்பற்றவும். மாணவர்கள், நண்பரின் குறையை வெளிப்படையாக சொல்ல வேண்டாம்.

பரிகாரம்:
அய்யப்பன் வழிபாடு, செயல்களில் அதிக நன்மையை தரும்.

Leave a Reply