shadow

images 3

புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் நிறைந்த, மேஷ ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகு அதிக நற்பலன் தருவர். செயல்கள் நிறைவேற அக்கறை கொள்வீர்கள். பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிட வேண்டியிருக்கும். உடன்பிறந்தவர்கள், உங்கள் சொல்லை ஏற்றுக் கொள்வர். பயணங்களின் எண்ணிக்கை முன்பு போல் இருக்காது.
புத்திரர்கள் அறிவு நிறைந்த செயல் புரிவர். நோய் குணமாகி ஆரோக்கியம் கூடும். வாழ்க்கைத் துணை இணக்கமாக நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் முத்திரை பதிப்பீர்கள். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணியை நிறைவேற்றுவர். பெண்கள் ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

பரிகாரம்:
பெருமாள் வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

முயற்சி வெற்றி பெற கடுமையாக பாடுபடும், ரிஷப ராசி அன்பர்களே!

குரு, ராகு தவிர, மற்ற கிரகங்கள் அளப்பரிய நற்பலன் தருவர். நிகழ்வுகள் இனிதாக அமையும். முருகப்பெருமானின் அருள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவர். புதியவீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில் விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணை குடும்ப நலனில் அக்கறை கொள்வர். தொழிலில் வளர்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள், மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் நன்றாகப் படித்து பரிசு, பாராட்டு பெறுவர்.

பரிகாரம்:
முருகன் வழிபாடு, குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும்.

அறிவும், செயல்திறனும் இருகண்கள் என, போற்றும், மிதுன ராசி அன்பர்களே!

சந்திரன், சுக்கிரன் ஓரளவு நற்பலன் தருவர். பொது இடங்களில் எவரிடமும் வாக்குவாதம் வேண்டாம். ஆடம்பரச் செலவை தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கையை வளர்ப்பதால், பணிகள் சீராக நிறைவேறும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். புத்திரர்கள், உங்கள் சொல்கேட்டு நடப்பர். உடல்நலனில் கவனம் வேண்டும். வாழ்க்கைத்துணை பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவார். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் ஓரளவு சலுகை பெறுவர். பெண்கள், நகை, பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் நன்மை சேரும்.

செயலின் பின் விளைவு உணர்ந்து நடக்கும், கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகு அதிக நற்பலன் தருவர். அளவுக்கு மீறி, உங்களை புகழ்ந்து பேசுபவர்களிடம் இருந்து விலகவும். குடும்பத்திற்கான பணத்தேவை அதிகரிக்கும். பயணங்களில் உரிய பாதுகாப்பு முறையைப் பின்பற்றவேண்டும். புத்திரர்களின் மனக்குறையை சரிசெய்து, முன்னேற்ற பாதையில் செல்ல உதவுவீர்கள். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழில், வியாபாரத்தில் அனுசரணையுடன் செயல்பட வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் அதிருப்திக்கு ஆளாகலாம்; கவனம். பெண்கள் வீட்டுத்தேவைக்கு சற்று திண்டாடலாம். மாணவர்களுக்கு படிப்பில் தெளிவு ஏற்படும்.

சந்திராஷ்டமம்: 2.8.15 காலை 6:00 – 3.8.15 இரவு 11:06 மணி.

பரிகாரம்:
மாரியம்மனை வழிபடுவதால் மனம் நிம்மதியாகும்.

தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்வு வளம்பெற உதவும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி ஓரளவு நற்பலன் தருவர். நடை, உடை, செயலில் வசீகரம் இருக்கும். பேசுவதில் நிதானம் வேண்டும். எதிர்ப்பு விலகி, வாழ்வில் முன்னேற புதிய பாதை உருவாகும். தாய்வழி உறவினர்கள், உங்களின் அன்பை விரும்புவர். புத்திரர்கள், நண்பர்களைப் போல பழகி சுமுக உறவு கொள்வர். உடல்நிலை பலம்பெறும். வாழ்க்கைத் துணை இன்ப, துன்பங்களில் சமபங்கு கொள்வார். தொழில், வியாபாரம் செழிக்க, புதியவர்களின் உதவி கிடைக்கும். பணியாளர்கள் ஓரளவு சலுகை பெறுவர். பெண்கள் குடும்ப விஷயத்தை, பிறரிடம் சொல்ல வேண்டாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற கூடுதல் பயிற்சி உதவும்.

சந்திராஷ்டமம்:
3.8.15 இரவு 11:07 – 5.8.15 இரவு 2:16 மணி.


பரிகாரம்:
விநாயகரை வழிபடுவதால் சிரமம் குறையும்.

உழைப்பே உயர்வு தரும் என்பதில், நம்பிக்கையுள்ள, கன்னி ராசி அன்பர்களே!

சூரியன், செவ்வாய், சுக்கிரன் அதிக நற்பலன் தருவர். மனதில் நம்பிக்கை வளரும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவிபெற அனுகூலம் உண்டு. உடல்நலம் சிறப்பாக அமைந்து, பணிகளில் முன்னேற்றம் தரும். புத்திரர்களின் நிறை குறைகளை சரி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் அதிக நன்மை இராது. மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் அதிருப்திக்கு ஆளாகலாம். கவனம். பெண்கள், வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் புரிந்து படித்து முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: 5.8.15 இரவு 2:17 – 8.8.15 காலை 5:26 மணி.

பரிகாரம்:
லட்சுமியை வழிபடுவதால் செல்வ வளம் கூடும்.

துணிவுடன் பணிகளில் ஈடுபடும், துலாம் ராசி அன்பர்களே!

செவ்வாய், ராகு, சனி தவிர, மற்ற கிரகங்கள் தாராள நற்பலன் தருவர். நீதி, நேர்மையுடன் செயல்கள் அமையும். இஷ்ட தெய்வ அருள் துணை நின்று உதவும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பண வரவும் கூடும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு செயல்படுவர். கடன் தொந்தரவு குறையும். இல்லறத்துணை அன்புடன் நடந்து கொள்வார். உடல்நிலை சுமாராக இருக்கும். தொழில், வியாபாரம் வளர முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். பணியாளர்கள் கருத்துடன் பணியைச் செய்து நற்பெயர் எடுப்பர். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்:
8.8.15 காலை 5:27 – இரவு 11:55 மணி.


பரிகாரம்:
தன்வந்திரி வழிபாடு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நண்பர்களின் ஆலோசனையை மதிக்கும், விருச்சிக ராசி அன்பர்களே!

புதன், ராகு, சந்திரன் ஓரளவு நற்பலன் தருவர். உடல்நிலை ஆரோக்கியம் பெறும் பணிகளை, குறித்த காலத்தில் நிறைவேற்றுவீர்கள். பிறர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டாம். வாகன பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்களின் மனக்குறையை சரி செய்வீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். பாக்கிப்பணம் வசூலாகும். இல்லறத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஓரளவே சலுகை எதிர்பார்க்கலாம். பெண்கள் வீட்டுச்செலவுக்கு சற்று திண்டாடலாம். மாணவர்கள் புதியவர்களிடம் நிதானித்து பழகவும்.

பரிகாரம்:
துர்க்கை வழிபாடு கவசம் போல பாதுகாக்கும்.

நல்ல செயல்களால் நன்மதிப்பு பெறும், தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சனி அதிக நற்பலன் தருவர். தாழ்வு மனப்பான்மையை தவிர்ப்பதால், செயல்களில் தரம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் கருத்து பேதம் கொள்வர். வெளியூர் பயணத்தை தவிர்க்க முயற்சிக்கவும். புத்திரர்களின் மனதில் மகிழ்ச்சி பெருக வழிவகை காண்பீர்கள். ஓய்வு நேரத்தை பயன் உள்ளதாக மாற்றுவீர்கள். இல்லறத் துணையின் நற்செயல், குடும்பத்திற்கு பெருமை தேடித்தரும். தொழில், வியாபாரத்தில் சிறு சிக்கல்கள் வந்து நீங்கும். பணியாளர்கள், சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள நேரலாம். பெண்கள் ஆன்மிக சுற்றுலா செல்வர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, மனதிற்கு ஆறுதல் தரும்.

றரிடம் ஜாக்கிரதை உணர்வுடன் பழகும், மகர ராசி அன்பர்களே!

கேது, புதன், சுக்கிரனால் நற்பலன் உண்டாகும். தாமதமான செயல் அதிர்ஷ்ட வசமாக நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் கடுமையான சொற்கள் மன வருத்தம் தரும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பர். உடல்நிலையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. மனைவியின் கருணை நிறைந்த அன்பு, மனதிற்கு நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் குறைந்த அளவு லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலையில் சிறு பிரச்னை வந்து நீங்கும். பெண்கள், கணவர் வழி உறவினர்கள் மூலம் நற்பலன் பெறுவீர்கள். மாணவர்கள் வெளியிடங்களில் சுற்றுவதை குறைக்கவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு, செயலில் வெற்றியை தரும்.

மனசாட்சியின் படி நடைபோடும், கும்ப ராசி அன்பர்களே!

செவ்வாய், சூரியன், குரு, சந்திரனால் நற்பலன் கிடைக்கும். மனதில் நம்பிக்கை வளரும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். குடும்ப நிகழ்வுகள் இனிதாக அமையும். பெண்களுக்கு உதவுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். புத்திரர்கள் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம். எதிரிகளாக செயல்பட்டவர்கள் கூட உதவுகிற இனிய சூழல் உருவாகும்.
இல்லறத் துணை வழி உறவினரை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு கூடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் பணவரவுக்கேற்ப ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள் நன்றாகப் படித்து நற்பெயர் பெறுவர்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு பலவித நன்மையும் வழங்கும்.

வாக்குறுதி தருவதில் நிதானித்து செயல்படும், மீன ராசி அன்பர்களே!

புதன், சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவர். சொந்தப் பணிகளில் மட்டும் கவனம் கொள்வது நல்லது. செலவில் சிக்கனம் பின்பற்றுவதால், கடன் பெறுவதைத் தவிர்க்கலாம். உதவி செய்தவர்களுக்கு, மறு உபகாரம் செய்வீர்கள். தாயின் அன்பும், ஆசியும் மனதிற்கு உற்சாகம் தரும். புத்திரர்களின் செயல்களை ஒழுங்குபடுத்துவீர்கள். சீரான ஓய்வு உடல் நலம் காக்கும். இல்லறத் துணையிடம் வாக்குவாதம் வேண்டாம். அதிக உழைப்பால், தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெறலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் அதிருப்திக்கு ஆளாகலாம். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக் கூடாது. மாணவர்கள் படிப்பில் மேம்படுவர்.

பரிகாரம்:
நரசிம்மரை வழிபடுவதால், சகல வளமும் கிடைக்கும்.

Leave a Reply