shadow

8தன் திறன் உணர்ந்து செயல்பட்டு, நன்மை பெறுகிற மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய், ராசிக்கு ஆறாம் இடத்திலும், செவ்வாய்க்கு இடம் தந்த புதன், ஆதாய ஸ்தானத்திலும் அனுகூலமாக உள்ளனர். உங்களிடம் கடந்த நாட்களில் உதவி பெற்றவர் விசுவாசம், கூடுதல் அன்புடன் பழகுவர். நிகழ்கால சிரமங்களை சரிசெய்ய, அவர்களின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்றவும். புத்திரரின் மனம், செயல்களில் உறுதி ஏற்பட அறிவுரை சொல்வீர்கள்.உடல்நல ஆரோக்கியம் சீராக அமைந்திட மருத்துவ சிகிச்சை, ஓய்வு உதவும். இல்லறத்துணை சில விஷயங்களில் கருத்து பேதம் கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை மிதமான அளவில் இருக்கும். பணியாளர் தம் கடமை உணர்ந்து பணிபுரிவதால் மட்டுமே, நற்பெயரை பாதுகாக்க இயலும். குடும்ப பெண்கள், கணவரிடம் எதிர்மறை குணத்துடன் பேசுவது தவிர்ப்பதால், ஒற்றுமை வளரும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பதால் மட்டுமே, உரிய தேர்ச்சி விகிதம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 22.3.2014 இரவு 12:01 மணி முதல் 23.3.2014 மதியம் 1:31 மணி வரை

 

நல்ல எண்ணங்களை, மனதில் நாளும் வளர்த்திடும், ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்யஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளார். சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகுவின் அளப்பரிய நற்பலனும் ஒரு சேரக்கிடைக்கும். துவங்குகிற செயல் அத்தனையும், வெற்றிபாதையில் நடைபோடும்.
மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் மிகுந்திருக்கும். அக்கம்,பக்கத்தவரின் கூடுதல் அன்பை பெறுவீர்கள். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரர் அறிவாற்றல் சிறந்து படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். இஷ்ட தெய்வ வழிபாடு திட்டமிட்ட படி நிறைவேறும். விவகாரம் அணுகாத சுமுக வாழ்வு பெறுவீர்கள்.இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில் வளம் சிறந்து, உபரி பணவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர் திறமைமிகு பணிக்காக பாராட்டு பரிசு பெறுவர். பெண்கள் குடும்ப நலன் சிறக்க, கணவருக்கு உறுதுணையாக இருப்பர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்று, மனதில் பெருமிதம் கொள்வர்.சந்திராஷ்டமம்: 23.3.2014 மதியம் 1.32 மணி முதல்
25.3.2014மாலை 4:08௮ மணி வரை.

 

மாறுபட்ட கருத்துகளை, துணிவுடன் தவிர்த்திடும் மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு நவக்கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் மட்டுமே நற்பலன் தரும் வகையில் உள்ளனர். மனதில் வடிவமைத்த திட்டங்களை, தற்போதைய அனுகூல சூழ்நிலை உணர்ந்து செயல்படுத்துவீர்கள். உழைப்புக்கு தகுந்த பலன் உறுதியாக கிடைக்கும். நட்பு பாராட்டுபவரின் குணநலன் உணர்ந்து பேசுவது நல்லது. புத்திரரின் எதிர்கால நலனை கவனத்தில் வைத்து, அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப உதவுவது நன்மை தரும். நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள்.
இல்லறத்துணை உங்கள் வாழ்வியல் சிரமம் குறைய, ஆலோசனை சொல்வார். தொழில், வியாபாரத்தில் உரிய இலக்கை அடைய, இனிய அணுகுமுறையுடன் செயல்படுவீர்கள். பணியாளர்களுக்கு நண்பரின் உதவி கிடைக்கும். பெண்கள், கணவரின் பணவரவுக்கேற்ப குடும்பத்தின் தேவையை ஒழுங்குப்படுத்துவர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.
சந்திராஷ்டமம்: 25.3.2014 மாலை 4:09 மணி முதல்27.3.14 மாலை 5.47 மணி வரை

 

கடகம்: நல்ஒழுக்கமான வாழ்வு, விருப்பமுடன் பின்பற்றும் கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்தவாரம் ராசிநாதன் சந்திரன், புகழ் ஸ்தான அதிபதி புதன், தொழில் ஸ்தான அதிபதி செவ்வாய் நற்பலன் வழங்குகின்றனர். மனதில் புத்துணர்வும், செயல்களில் கூடுதல் நேர்த்தியும் உருவாகும். நிர்பந்தம் உருவாக்குகிற பணிகளை, தயக்கம் இன்றி நிறைவேற்றி,
குடும்ப உறுப்பினர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலத்துடன், முருகப்
பெருமானின் நல்லருளும், மங்கல நிகழ்வை உருவாக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி அவசியமாகும். புத்திரர், உங்கள் சொல்கேட்டு நடந்து பெருமை தேடித்தருவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ணவேண்டாம்.இல்லறத்துணை கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால், குடும்ப ஒற்றுமை வளரும். தொழில், வியாபாரம் செழித்து வளர, உங்களின் சாதுர்யபேச்சு, கடின உழைப்பு துணை நிற்கும். பணியாளர்களுக்கு சிறு அளவிலான சலுகை கிடைக்கும். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. மாணவர்கள், நண்பரிடம்
பேசுவதில் நிதானம் பின்பற்றவும்.சந்திராஷ்டமம்: 27.3.14 மாலை 5:48 மணி முதல்
29.3.14 இரவு 9:27 மணி வரை.

 

சிம்மம் : துன்பத்தை கண்டு துவளாத, மனம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்தவாரம் சனி, ராகு, குருவின் அமர்வு மட்டுமே, சிறப்பான பலன்களை தருகின்றனர். சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாப்பதில், கூடுதல் அக்கறை கொள்வீர்கள்.
புதியவர், உங்களின் நற்குணம், செயல்திறன் அறிந்து உதவிகரமாக நடந்து கொள்வர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் தகுதி, திறமை வளர்த்து படிப்பு, வேலையில்
சிறப்பிடம் பெறுவர். குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்காக, கொஞ்சம் பணக்கடன் பெற
வேண்டியதிருக்கும்.இல்லறத்துணையின் குறைகளை சரிசெய்வதில், பொறுமை குணம் அவசியம். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும்.
பணியாளர்கள், நிலுவைப்பணி நிறைவேற்றி, மனதில் நிம்மதி அடைவர். குடும்ப பெண்கள், பணச்செலவில் சிக்கனம் பின்பற்ற வேண்டும். மாணவர்கள், நண்பரின் விளையாட்டுக்குணம் நிறைந்த பேச்சை, பொறுமையுடன் ஏற்பது நட்பை வளர்க்கும்.
சந்திராஷ்டமம்: 29.3.14 இரவு 9:28 மணி முதல் அன்று நாள் முழுவதும்.

 

கன்னி : தன்னிடம் பழகுபவர்களை, சமமாக கருது கின்ற கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் நற்பலன் வழங்குகின்றனர். சிலரது வஞ்சக புகழ்ச்சி கலந்து, பேச்சை நம்பி தகுதி மீறிய செயல்களில் ஈடுபட மனதில் துணிவு உருவாகும்.
இதனால், சிரமம் ஏற்படலாம் கவனம் தேவை. உடன்பிறந்தவர் இயன்ற உதவி மனமுவந்து தருவர். உறவினர்களின் வருகையால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாகன பாதுகாப்பில், உரிய கவனம் வேண்டும். உடல்நல ஆரோக்கியம் பலம் பெற, சத்து மிகுந்த உணவு உண்பீர்கள்.
இல்லறத்துணை, சேமிப்பு பணத்தை குடும்பச் செலவுக்கு தந்து உதவுவார். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்து உற்பத்தி, பணவரவை சீராக்குவீர்கள். பணியாளர் நிர்வாகத்தின்
வழிகாட்டுதல், அக்கறையுடன் பின்பற்றுவர்.
குடும்ப பெண்கள், இஷ்ட தெய்வ வழிபாடு நடத்தி, மனதிருப்தி கொள்வர். மாணவர்கள்,
ஆசிரியரின் அறிவுரையை மதித்து நடந்து, படிப்பில் முன்னேற்றம் காண்பர்

 

துலாம் : சொல்லை விட, செயலுக்கு முக்கியத்துவம் தரும், துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், சுக ஸ்தானமாகிய நான்கில் அனுகூலமாக உள்ளார். ஆறாம் இடத்தில் உள்ள சூரியன், பாக்ய ஸ்தானத்தில் உள்ள குரு, கூடுதல் நற்பலன் தருகின்றனர். சுய தேவை பூர்த்தியாகிற அளவில், தாராள பணவசதி துணை நிற்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.
சிலர் புதிய வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரர் சில விஷயங்களில், முரண்பட்ட மனதுடன் நடந்து கொள்வர். எதிரியை வெல்வதற்கு, சாதகமான வழிமுறை உருவாகும்.
இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் குடும்ப நலம் காத்திடுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி, உபரி பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள், பணிவு மிகுந்த குணத்துடன் செயல்பட்டு, புதிய பதவி பெறுவீர்கள். குடும்ப பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களிடம், நன்மதிப்பு பெறுவர். மாணவர்கள், படிப்புக்கான தேவை பூர்த்தி செய்ய, பெற்றோரின் அனுசரனை மிகுதியாக கிடைக்கும்.

 

விருச்சிகம் : நல்ல காரியங்களுக்கு, பணம் தாராளமாக செலவிடும் விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய், ஆதாய ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளார். சுக்கிரன், புதன், கேது கூடுதல் நற்பலன்களை வழங்குகின்றனர். செயல்களில் சுறுசுறுப்பு, நேர்த்தி அதிகரித்து, ஆதாய பலன்களை எளிதில் பெற்றுத் தரும்.
அக்கம், பக்கத்தவரிடம் உங்கள் மீதிருந்த அதிருப்தி எண்ணம் விலகும். அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர்.
வாகன பயன்பாட்டு திருப்திகர அளவில் இருக்கும். புத்திரரின் உடல் நலத்தில், கூடுதல் அக்கறை கொள்வது அவசியம். எதிரியால் வருகிற இடையூறு இஷ்ட தெய்வ அருள் பலத்தினால் விலகும்.இல்லறத்துணை, உங்களின் நல்ல குணங்களை மனதார பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, சில புதிய உத்திகளை கையாளுவீர்கள். பணியாளர்கள், தொழில் நுட்ப அறிவை வளர்க்க பணி இலக்கை எளிதில் பூர்த்தி செய்வர். பெண்கள், தியாக மனதுடன் நடந்து, குடும்பத்தின் நன்மைகளை பாதுகாத்திடுவர். மாணவர்கள், பெற்றோர் சொல் மதித்து, படிப்பில் முழு அளவிலான கவனம் கொள்வர்.

 

தனுசு : அடுத்தவர் நலம் சிறக்க, இயன்ற அளவில் உதவும் தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு வாக்கு ஸ்தானமாகிய, இரண்டாம் இடத்தில் சுக்கிரன் அனுகூலமாக உள்ளார். சனி பகவான், நட்பு கிரகம் ராகுவுடன் ஆதாய ஸ்தானத்தில் இடம் பெற்று, குருவின் சுப பார்வையை பெறுகிறார். இனிய வார்த்தை பேசி நண்பர், உறவினர் மனதில் சிறப்பிடம் பெறுவீர்கள். உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பவர், விலகுகிற நன்னிலை உருவாகும். வாகனப் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரரின் விரக்தி மனப்பாங்கு அகற்றி, நல்ல சிந்தனைகளை உருவாக்குவீர்கள். உடல் நலம் சீராக இருக்க, சத்து நிறைந்த உணவு உண்பதும், சீரான ஓய்வு எடுப்பதும் அவசியம். இல்லறத்துணை, உங்கள் மீது நல்ல அபிப்ராயத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர், நிர்வாகத்தின் சட்ட திட்டம் கவனமுடன் பின்பற்றுவதால், நற்பெயரை பாதுகாக்கலாம். பெண்கள், பணவசதிக்கேற்ப ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், நண்பர்களின் உதவியால், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

 

இறை பக்தியில், கூடுதல் நம்பிக்கையுள்ள மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசியில் சுக்கிரன், தைரிய ஸ்தானமாகிய மூன்றில் சூரியன், அனுகூல அமர்வாக அமைந்து சிறப்பான பலன்களைத் தருகின்றனர்.
உங்கள் நடை, உடை, செயலில் வசீகர மாற்றம் ஏற்படும். இரக்க குணத்துடன் தன்னைச் சார்ந்தவர்களின் தேவை, பூர்த்தியாக உதவுவீர்கள். உஷ்ணம், அஜீரணம் போன்ற தொந்தரவு களால், உடல்நலக் குறைவு வராமல் கவனம் கொள்ளவும். புத்திரர், நண்பருக்கு இணையாக, உங்களுக்கு உறுதுணை புரிவார்.நிர்பந்த பணக்கடனில், ஒரு பகுதியை செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு உங்களின் சமயோசித நடவடிக்கையால் சரியாகும். உத்தியோகஸ்தர், நிர்வாகத்திடம் தன் மீதுள்ள நம்பிக்கைக்கு, குறை எதுவும் வராமல் செயல்படுவர்.
குடும்ப பெண்கள், கணவரின் கருத்துக்கு, உரிய முக்கியத்துவம் தருவர். மாணவர்கள், ஆன்மிக கருத்துகளை அறிவதில் ஆர்வம் கொள்வர்.

தன் செயல்களால், நற்பெயர் பெற முயற்சிக்கும் கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் கேது, ஐந்தில் குரு, பன்னிரெண்டாம் இடத்தில் சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். சிறு செயலையும், மிகுந்த நேர்த்தியுடன் நிறைவேற்றுவீர்கள்.
இஷ்ட தெய்வ அருள் பலம், கடின செயலும் எளிதாக மாற துணை நிற்கும். உங்களின் வளம் நிறைந்த வாழ்வு முறையை, பொறுக்காத சிலர் பரிகாசம் செய்வர். அவர்களிடம் விலகுவதால், மனஅமைதி பாதுகாக்கலாம். வாகனத்தில் கூடுதல் பயன்பாடு பெற, பராமரிப்பு மேற்கொள்வீர்கள். புத்திரரின் ஒவ்வொரு சொல்லும், வேத சாஸ்திர வார்த்தை போல இருக்கும்.
உடல் நலத்திற்கு, சிறு அளவில் மருத்துவ சிகச்சை தேவைப்படலாம். இல்லறத்துணை விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் மனம் ஏற்றுக் கொள்கிற வகையில் உற்பத்தி, விற்பனை பணவரவு கிடைக்கும். பணியாளர்கள், கூடுதல் வேலை
வாய்ப்பு, திருப்திகர சன்மானம் பெறுவர். பெண்கள், சேமிப்பு பணத்தில் சிறுசெலவுகளை மேற்கொள்வர். மாணவர்கள், நன்றாக படித்து ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டு பெறுவர்.

 

நண்பர்களிடம் நல்அன்புடன் பழகுகிற மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, இந்த வாரம் நற்பலன் வழங்குகின்றனர். பிறரது வற்புறுத்தல் காரணமாக, தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம்.
பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. அஷ்டமச் சனியின் தாக்கத்திலும், சுக்கரனின் அமர்வு சில அதிர்ஷ்ட பலன் மற்றும் வாய்ப்புகளை கொண்டு வந்து தரும்.
வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் சிந்தனைத் திறன் அதிகரித்து, முன்னேற்ற பாதையில் நடைபோடுவர். சீரான ஓய்வு, உடல்நலம் பாதுகாக்க உதவும். தியானம், தெய்வ வழிபாடு மனஅமைதியைத் தரும்.இல்லறத்துணை, உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை மிதமான அளவில் இருக்கும். இயந்திர தொழிற்சாலை பணியாளர், பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்றவும். பெண்கள், குடும்ப நலனில் கூடுதல் அக்கறை கொள்வர். மாணவர்கள், புதிய விஷயங்களை பெற்றோரின் வழிகாட்டுதலால் அறிந்து கொள்வர்.

Leave a Reply