shadow

weekly rasipalanபக்குவம் நிறைந்த மனதுடன் செயல்படும் மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சூரியன், சுக்கிரன்; ஆறாம் இடத்தில் செவ்வாய், ராகு அனுகூலமாக உள்ளனர். நல்லவர்களின் அன்பு, உதவி கிடைக்கும். புதிய திட்டம் செயல்படுத்துவீர்கள். உடன் பிறந்தவர் உங்களின் ஆலோசனையை மதித்து செயல்படுவர்.குடும்பத்தேவை நிறைவேற்ற திருப்திகர அளவில் பணவசதி இருக்கும். புத்திரர் செயல்திறன் வளர்ந்து படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். உடல் நல ஆரோக்கியம் சீராக, உணவில் கட்டுப்பாடு பின்பற்றுவது நல்லது.இல்லறத்துணை அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார். அதிக கவனம், உழைப்பு தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பணியாளர் நிதானமாக செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள், அத்தியாவசியத்தேவை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்வர். மாணவர்கள், சுகமாணவர்களிடம் படிப்பு தொடர்பாக விவாதிப்பதில் நிதானம் வேண்டும்.

பரிகாரம்: அகத்தியரை மனதில் தியானித்து, ”ஓம் அகத்தீஸ்வராய நமஹ’ என, வழிபடுவதால் வெற்றி கூடும்.

லட்சியம் நிறைவேற்றுவதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டில் சுக்கிரன், ஆறாம் இடத்தில் சனி லாப ஸ்தானத்தில் கேது அனுகூலமாக உள்ளனர். பேசும் வார்த்தை இனிதாக இருப்பினும், பழகுபவர்களின் மனம் சூழ்நிலை உணர்ந்து பேசுவது நன்மை தரும்.கடனுக்கு கிடைக்கிறதென்று அதிக பயன் தராத வீட்டு உபயோகப் பொருள் வாங்க வேண்டாம். வாகனத்தில் பராமரிப்பு பயணங்களை எளிதாக உருவாக்கும். புத்திரரின் கவனக்குறைவை கண்டிப்பது, சரி செய்வதில் நிதானம் பின்பற்றவும். விவகாரங்களில் சுமுகத்தீர்வு பெற அனுகூலம் உண்டு. இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர் கூடுதல் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற புதியவர்களின் அறிமுகம், உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை வந்து சேரும். குடும்ப பெண்கள், நிம்மதியான வாழ்க்கை நடத்துவதில் கவனம் கொள்வர். மாணவர்கள் அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்கக் கூடாது.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதுடன், பக்தி நெறி பின்பற்றும் ஏழைக் குடும்பத்திற்கு உதவலாம்.

அன்பு பண்புடன் பழகும் குணம் நிறைந்த மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசியில் சுக்கிரன் தனஸ்தானத்தில் உச்சம் பெற்ற குரு அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்கள் எதிர்மறை பலன் தருகிற இடங்களில் உள்ளனர். ஆடம்பரமாக செயல்படுவதில் ஆர்வம் வளரும். இதனால், அதிக பணச்செலவு சிலரது ஏளனப்பேச்சை எதிர்கொள்ள நேரிடலாம். கவனம் தேவை.தாயின் எண்ணங்களை மதித்து நடப்பதால் குடும்ப ஒற்றுமை சீராகும். புத்திரரின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். எதிரியிடம் விலகுவதால் சிரமம் வராமல் தவிர்க்கலாம். இல்லறத்துணை, உங்களின் கஷ்டம் தீர உதவுவார். தொழிலில் அளவான மூலதனம் கூடுதல் உழைப்பு என்கிற நடைமுறை நல்ல பலன் தரும். இயந்திர பிரிவு பணியாளர் பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்றவும். குடும்ப பெண்கள் தாய்வீட்டு உதவி கேட்பதில் கண்டிப்பு கூடாது. மாணவர்கள், சாகசம் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

சந்திராஷ்டமம்: 12.7.14 நள்ளிரவு 12:50 மணி முதல்14.7.14 அதிகாலை 3:17 மணி வரை

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுடன் கொண்டைக் கடலை சுண்டல் நிவேதனம் செய்து பிரசாதம் வழங்கலாம்.

பல்வேறு திறமைகளை தன்னுள் வளர்க்க விரும்பும் கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய், ராகு, பன்னிரெண்டாம் இடத்தில் சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். இஷ்ட தெய்வ அருளுடன் முருகப் பெருமானின் நல்லருளும் உங்களின் முயற்சி சிறப்பாக நிறைவேற உதவும்.பயணங்களின் முக்கியத்துவம் கருதி செயல்படுவீர்கள். குடும்பச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும்.புத்திரர் அறிவில் சிறந்து படிப்பு, வேலை வாய்ப்பில் முக்கிய இடம் பெறுவர். உடல் நலத்திற்கு அளவான உழைப்பு சீரான ஓய்வு அவசியம். இல்லறத்துணை உங்களின் கருத்துகளை அன்புடன் ஏற்றுக் கொள்வார். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குளறுபடி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், சிக்கன பணச்செலவில் குடும்பத்தேவை நிறைவேற்றுவது சிரமம் தவிர்க்கும். மாணவர்கள், அக்கறையுடன் படிப்பதால் நற்பெயர், தேர்ச்சிவிகிதம் பாதுகாக்கலாம்.

சந்திராஷ்டமம்: 14.7.14 அதிகாலை 3:18 மணி முதல்16.7.14அதிகாலை 5:55 மணி வரை

பரிகாரம்: சூரிய வழிபாடு நடத்துவதுடன் தந்தை வழிசார்ந்த, முதியவர்களுக்கு உதவலாம்.

அதிக புகழும், பணவரவும் பெறுவதில் ஆர்வமுள்ள, சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, மூன்றாம் இடத்தில் உச்சம் பெற்ற சனி பகவான், லாப ஸ்தானத்தில் முக்கூட்டு கிரக சேர்க்கையாக சூரியன், புதன், சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். இனிய அணுகுமுறையால் நன்மதிப்பு பெறுவீர்கள். குடும்பத்தினர் மங்கல நிகழ்வு மகிழ்ச்சிகரமான நிலை இருக்கும். தைரிய மனப்பாங்குடன் பணிகளில் ஈடுபடுவீர்கள்.வாகனத்தில் பராமரிப்பு பணச்செலவு ஏற்படலாம். சொத்துகளை பராமரிக்க நம்பகமானவர்களை பணியமர்த்துவது நல்லது. எதிர்மனப்பாங்கு உள்ளவரும் உதவி கேட்டு அணுகுவர். இல்லறத்துணையின் சாதகயோக பலம், குடும்ப நலனுக்கு துணை நிற்கும்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். பணியாளர்கள், பொறுப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள், குடும்ப பணவசதிக்கேற்ப ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், படிப்பு தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்க அனுகூலம் உண்டு.

சந்திராஷ்டமம்: 17.7.14 அதிகாலை 5:56மணி முதல்19.7.14காலை 9:37மணி வரை.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதுடன், விநாயகரின் பல்வேறு பெயர் வைத்துள்ள, ஏழைச்சிறுவர் படிப்புக்கு உதவலாம்.

தன்னைச் சார்ந்தவர் வாழ்வு வளம் பெற உதவும், கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன், புதன் பதினொன்றில் உச்சம் பெற்ற குரு அனுகூலமாக உள்ளனர். மனதில் நெருடலாக இருந்த சில விஷயங்களுக்கு, தீர்வு கிடைக்கும். பேசும் வார்த்தையில் நிதானமும், விவேகமும் பின்பற்றுவது, புதிதாக சிரமம் அணுகாமல் தவிர்க்கும். புதிய வாகனம், வீடு வாங்க அனுகூலம் உண்டு.புத்திரர் நேர்மறை எண்ணங்களுடன் பணிகளில் ஈடுபடுவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும். இல்லறத்துணையின் கருத்துகளில் உள்ள நியாயம் ஏற்பதால் மட்டுமே, குடும்ப ஒற்றுமை சீராகும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்த வேண்டும். பணியாளர், பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்ற, புதிய வழி முறை காண்பது அவசியம். பெண்கள், உறவினர் குடும்ப விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதல் கவனமுடன் ஏற்று செயல்படுவர்.

சந்திராஷ்டமம்: 19.7.14 காலை 9:38 மணி முதல்அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபாடு செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கலாம்.

நேர்மை வழியில் மன உறுதியுடன் செயல்படும், துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, ஆறாம் இடத்தில் கேது, ஒன்றாம் இடத்தில் சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்கள் எதிர்மறையாக பலன் தருகிறது. மனம் தளராமல் செயல்படுவதால் மட்டுமே, திட்டமிட்ட பணி குறித்த காலத்தில் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் செயல்களை விமர்சிக்க வேண்டாம். வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும்.புத்திரரின் தேவைகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். எதிரியின் பொறாமையினால் உருவான சிரமம் விலகும். இல்லறத்துணையின் குடும்ப நலன் சிறக்க உதவும் பணிகளை மேற்கொள்வார். தொழிலில் உருவாகிற குளறுபடியை மாற்று உபாயத்தினால் சரி செய்வது அவசியம்.பணியாளர்கள், கடமை உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே நிர்வாகத்தின் நன்மதிப்பு பெறலாம். பெண்கள், சமையலறை பணிகளில் உரிய பாதுகாப்பு முறை பின்பற்ற வேண்டும். மாணவர்கள், கூடுதல் பயிற்சியினால் மட்டுமே எதிர்பார்த்த தேர்ச்சி விகிதம் பெற இயலும்.

பரிகாரம்: சனி பகவானை வழிபடுவதுடன், ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி புரியுங்கள்

தன் செயல்பற்றி மற்றவர் கருத்து அறிய விரும்பும், விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு கேது, சூரியன், சனி தவிர மற்ற கிரகங்கள் அனுகூல பலன் தருகிற இடங்களில் உள்ளனர். இதனால், மனதில் புத்துணர்வும், செயல்களில் பரிமளிப்பும் உருவாகும். பணிகளில் வெற்றி பெறுவதற்கான வழி தெளிவாக உருவாகும். அறிவுப்பூர்வமாக பேசி புதியவர்களின் அன்பை பெறுவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் விரும்பிய பொருள் அதிக தரத்துடன் வாங்கித் தருவீர்கள். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் ஆலோசனை, மனதில் புதிய எண்ணங்களை உருவாக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து லாப விகிதம் கூடும். அரசின் சட்ட திட்டம் மதித்து செயல்பட வேண்டும். பணியாளர்கள், உடல்நலம் பேணுவதால் மட்டுமே பணிபுரிவதில் ஈடுபாடு வளரும். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக் கூடாது.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால், வாழ்வில் நன்மை பலவும் உருவாகும்

அன்பின் மகத்துவம் உணர்ந்து பின்பற்றும் தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, பதினொன்றாம் இடத்தில் உள்ள சனி மற்றும் சந்திரன் நற்பலன் வழங்குகின்றனர். மற்ற கிரகங்களின் அமர்வு, எதிர்மறையாக உள்ளது. நன்னடத்தை இல்லாத சிலர், உங்களிடம் நட்பு பாராட்ட முயற்சிப்பர். அவர்களிடம் விலகுவதால், நற்பெயர் பாதுகாக்கலாம். குடும்பத்தின் நலன்களை பாதுகாப்பதில், கூடுதல் அக்கறை வேண்டும்.வாகன பராமரிப்பில், பணச்செலவு அதிகரிக்கும். புத்திரரின் உடல்நலத்திற்கு சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத்துணையின் கவனக்குறைவை பெரிதாக குறை சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர், நிர்வாகத்தின் சட்டதிட்டம் அக்கறையுடன் பின்பற்ற வேண்டும். பெண்கள், நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

பரிகாரம்: யோக நரசிம்மரை வழிபடுவதால், கஷ்டம் விலகி நன்மை சேரும்.

ஆன்மிக கருத்துக்களில், அதிக நம்பிக்கையுள்ள மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் கேது, ஆறாம் இடத்தில் சூரியன், புதன், சப்தம ஸ்தானத்தில் உச்சம் பெற்ற குருபகவான், அனுகூலமாக உள்ளனர். பசு, பால், பாக்ய யோகம் அமைந்து, உங்கள் வாழ்வை வளமாக்கும். சூழ்நிலைகளின் தாக்கம் உணர்ந்து செயல்படுவீர்கள். புதியவர்களின் நட்பு, உதவி கிடைக்கும்.வாகனத்தில் மிதவேகம் நல்லது. புத்திரர் அதிருப்தி மனப்பாங்குடன் நடந்து கொள்வர். உங்களின் விவேகம், செயல்திறன் கண்டு எதிரி விலகுவர். இல்லறத்துணையின் மனதில் இருந்த கவலையை மாற்றும் செயல்புரிவீர்கள். தொழிலில் புதிய அணுகுமுறையினால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் வரும். பணியாளர்கள், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க கூடாது. குடும்ப பெண்கள், மனக்குறை மறந்து நடைமுறை வாழ்வில் கவனம் கொள்வர். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில், நிதானம் பின்பற்றவும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதுடன், பசுவுக்கு ஊற வைத்த பச்சரிசியில் வெல்லம் கலந்து கொடுக்கலாம்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில், ஆர்வமுள்ள கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் தவிர, மற்ற கிரகங்கள் எதிர்மறையாக செயல்படுகின்றனர். இதனால், பேச்சு, செயலில் மிகுந்த நிதானம் பின்பற்ற வேண்டும். குடும்பத்தினர் ஒற்றுமை பேணிக்காப்பது அவசியம். ஆன்மிக வழிபாடு சில நன்மை உருவாக காரணமாக அமையும். வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் பின்பற்றவும்.புத்திரர் விரும்பிய பொருள் கேட்டுப் பெறுவதில், உறுதியாக இருப்பர். பணவசதிக்கேற்ப வாங்கித் தருவீர்கள். எதிர்மறையாக பேசுபவரிடம் விலகுவது நல்லது. இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர் உதவிகரமாக நடந்து கொள்வர். தொழிலில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. பணியாளர்கள், கூடுதல் உழைப்பில் குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். பெண்கள், சேமிப்பு பணத்தில் சிறுசெலவு மேற்கொள்வர். மாணவர்கள், முயற்சியுடன் படித்து, சிறந்த தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: அன்னை மீனாட்சியை வழிபடுவதால், வாழ்வில் சகல வளமும் பெறலாம்.

சூழ்நிலைக்கு ஏற்ப, சமயோசிதமாக செயல்புரியும் மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் புதன், சுக்கிரன், ஐந்தில் உச்சம் பெற்ற குரு அனுகூலமாக உள்ளனர். கடந்த கால நற்செயலுக்கான பலன் வந்து சேரும். ஆதாய பணவரவை முதலீடாக பயன்படுத்துவீர்கள். உறவினர்களின் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி கூடும். சிலர், புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சி நிறைவேறும். புத்திரர் சாஸ்திர அறிவை வளர்த்துக் கொள்வர். உதவுவது போல பாசாங்கு செய்பவரிடம் விலகுவது நல்லது.சீரான ஓய்வு, ஊட்டம் தரும் உணவு, உடல்நலத்தை பாதுகாக்கும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணம் பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர், பணியாளர்களை ஊக்கப்படுத்தி, பணி இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள், குடும்ப உறுப்பினர்களை அன்புடன் வழி நடத்துவர். மாணவர்கள், படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக பெறுவர்.

பரிகாரம்: சப்த மாதர்களை வழிபடுவதுடன், பெற்ற தாயின் விருப்பம் கேட்டு நிறைவேற்றவும்.

Leave a Reply