shadow

இந்த வார ராசிபலன் 08-11-2015 முதல் 14-11-2015 வரை

weekly rasipalan

மேஷம்

சவால் நிறைந்த பணியை எளிதாக நிறைவேற்றும், மேஷ ராசி அன்பர்களே!

குரு செவ்வாய் ராகு அதிக நன்மை தருவர். செயல்கள் நிறைவேற பூர்வ புண்ணிய பலன் உதவும். தம்பி, தங்கைகளிடம் சச்சரவு வேண்டாம். பயணங்கள் இனிய அனுபவம் தரும். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொள்வர். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டு. உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனைவியுடன் சிறு கருத்து வேறுபாடு வரலாம். தொழில், வியாபாரத்தில் பணவரவு மேம்படும். பணியாளர்களுக்கு அதிக பணவரவால் கடன் சுமை குறையும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். மாணவர்கள் நன்றாகப் படித்து பாராட்டு பெறுவர்.

சந்திராஷ்டமம்: 12.11.15 காலை 10:02 மணி முதல் 4.11.15 மாலை 6:55 மணி வரை.

பரிகாரம்: சிவன் வழிபாடு, சகல நன்மை தரும்.

ரிஷபம்

மன தைரியமும், செயலில் உறுதியும் கொண்ட, ரிஷப ராசி அன்பர்களே!

குரு, ராகு, சனீஸ்வரர் தவிர, மற்ற கிரகங்கள் அனுகூலம் தருவர். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். வாழ்வு சிறக்க எதிர்பார்த்த சில நன்மைகள் தேடி வரும். நண்பர்கள் உதவுவர். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். புத்திரர்கள் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். பயணத்தின் போது தவறாமல் பாதுகாப்பை பின்பற்றவும். கடன் கொடுத்த பணம் வசூலாகும்.
மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து லாபம் கூடும். பணியாளர்களின் பொறுப்பான செயலுக்கு பாராட்டு கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டு உதவி பெறுவர். மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்குவர்.

சந்திராஷ்டமம்: 14.11.15 மாலை 6:56 மணி முதல் இரவு 11:55 மணி வரை.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.

மிதுனம்

உறவினர்களிடம் பாசத்துடன் பழகும், மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனீஸ்வரர், சந்திரன் அதிக நன்மை தருவர். உறவினர்களிடம் உங்கள் மீது இருந்த மனஸ்தாபம் விலகி, அன்பு மலரும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். பொது இடங்களில் அதிகம் பேச வேண்டாம். புத்திரர்களின் செயல்கள் நிறைவேற ஆலோசனையும், உதவியும் வழங்குவீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்ய பணஉதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு தாமதமான சலுகை முயற்சியால் கிடைக்கும். பெண்களுக்கு கணவரிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகும். மாணவர்கள் தங்கள் பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும்.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு, வெற்றிக்கு உதவும்.

கடகம்

இயன்ற அளவில் பிறருக்கு உதவும், கடக ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். மனதில் இருந்த குழப்பம் விலகும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். செயல்களில் வெற்றி அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்களின் எதிர்கால நல்வாழ்வுக்காக திட்டமிடுவீர்கள். உங்களுக்கு வேண்டாதவர்கள் கூட உங்களின் இனிய அணுகுமுறை கண்டு வியப்படைவர். பூர்வ சொத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். நோய் தொந்தரவு குறையும். மனைவியின் நற்செயல் குடும்பத்திற்கு பெருமை தேடித்தரும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். சேமிப்பு உயரும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பெண்கள் கலையம்சம் நிறைந்த வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் நன்றாக படித்து நண்பர்களுக்கும் படிப்பில் உதவுவர்.

பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

சிம்மம்

சிறிய செயல்களையும் நேர்த்தியாக செய்யும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், சந்திரன் நற்பலன் தருவர். பேச்சு, செயல் மற்றும் செலவில் நிதானம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் அதிருப்தி கொள்வர். நம்பகக் குறைவானவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர்கள், உங்கள் சொல் கேட்டு நடப்பர். பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளவும். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கடன் பெறுவதைத் தவிர்க்கவும். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் சுமாராகப் படிப்பர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.

கன்னி

நற்சிந்தனையை மனதில் நாளும் வளர்த்திடும், கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனீஸ்வரர், சந்திரன் நன்மை தருவர். உங்கள் செயலை, சிலர் குறை சொல்வர். பொறுமையைப் பின்பற்றுவதால், சில நன்மைகளைப் பெறலாம். வீண் பெருமையால் செலவு அதிகரிக்கலாம். கவனம். புத்திரர்கள் பெற்றோருடைய உழைப்பின் அருமையை உணர்ந்து கொள்வர். எதிரியால் உருவான சிரமம் வந்த சுவடு தெரியாமல் விலகும். மனைவி, உங்களின் கவுரவத்தைக் காக்க வழி காட்டி சேமிப்பு பணத்தை தந்து உதவுவார். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு புதிய முதலீடு வகையில் பரிசீலனை அவசியம். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை உண்டு. இயந்திரங்களை இயக்கும் போது கவனம் வேண்டும். பெண்கள், அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரையை மதித்து நடப்பது நன்மை தரும்.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு, மகிழ்ச்சி தரும்.

துலாம்

பணிகளை துல்லியமாக செய்து நற்பெயர் பெறும், துலாம் ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், கேது நன்மை தருவர். மனச்சோர்வை தவிர்ப்பதால் பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற தாராள பண வசதி இருக்கும். பொது இடங்களில் எவரிடமும் நிதானித்து பேசவும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
புத்திரர்கள் விரும்பிய பொருளைப் பெற பிடிவாதம் செய்வர். உடல்நிலை நன்றாக இருக்கும். பயணங்களை கூடுமானவரை தவிர்க்கவும். மனைவி வழி உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு உயரும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு, இடர் நீக்கும்.

துலாம்

பணிகளை துல்லியமாக செய்து நற்பெயர் பெறும், துலாம் ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், கேது நன்மை தருவர். மனச்சோர்வை தவிர்ப்பதால் பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற தாராள பண வசதி இருக்கும். பொது இடங்களில் எவரிடமும் நிதானித்து பேசவும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
புத்திரர்கள் விரும்பிய பொருளைப் பெற பிடிவாதம் செய்வர். உடல்நிலை நன்றாக இருக்கும். பயணங்களை கூடுமானவரை தவிர்க்கவும். மனைவி வழி உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு உயரும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு, இடர் நீக்கும்.

தனுசு

வெற்றிகளை குவித்தாலும் பணிவு தவறாத, தனுசு ராசி அன்பர்களே!

குரு, சூரியன், புதனால் அதிக நன்மை கிடைக்கும். ஓய்வை தவிர்த்து உழைப்பில் ஆர்வம் கொள்வீர்கள். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய, தாராள பணவரவு கிடைக்கும். சிலர் வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். புத்திரர்களின் உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படும். நன்றாகப் பழகுபவரிடமும் நிதானித்து பேச வேண்டும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து லாபம் கூடும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைத்து மனம் மகிழ்வர். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் நண்பரின் உதவியால் படிப்பில் முன்னேறுவர்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

மகரம்

நியாயம், தர்மத்தைப் பின்பற்றும், மகர ராசி அன்பர்களே!

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல பலன் தரும் இட அமர்வில் உள்ளனர். உங்களின் புத்திசாலித்தனத்தை பார்த்து நண்பர்கள், உறவினர்கள் பாராட்டுவர். கடன் கொடுத்த பணம் வசூலாகும். உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவுவர். வீடு, வாகனத்தில் மாற்றம் செய்ய யோகமுண்டு. புத்திரர்கள் படிப்பு, வேலையில் சிறந்து விளங்குவர். புதிய சொத்து வாங்க யோகம் உண்டு. மனைவியின் அன்பும், ஆறுதல் வார்த்தையும் நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் காணலாம். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயரும், சலுகையும் பெறுவீர்கள். பெண்கள் உறவினர்களை உபசரித்து குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர். மாணவர்கள் நண்பரின் உதவியால் படிப்பில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு, செல்வ வளம் தரும்.

கும்பம்

குடும்ப நலன் மீது அதிக அக்கறை கொண்ட, கும்ப ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சந்திரனால் அதிக நன்மை உண்டு. நண்பர்களின் அன்பு உதவி கிடைத்து, புதிய பணிகளை துவக்குவீர்கள். பயணங்கள் எதிர்பார்த்த நன்மை தரும். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சி தரும். புத்திரர்கள் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். மனைவியின் அன்பு, பாசம் மனம் நெகிழ வைக்கும். தொழில், வியாபாரம் சுமாரான லாபம் தரும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அதற்கேற்ப சலுகையும் கிடைக்கும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படித்து பெற்றோரிடம் நற்பெயர் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 8.11.15 காலை 6:00 மணி முதல் 9.11.15 இரவு 11:06 மணி வரை

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

மீனம்

கண்ணும், கருத்துமாக பணிபுரியும், மீன ராசி அன்பர்களே!

சந்திரன், புதன் ஓரளவு நன்மை தருவர். வேண்டாத சிலர் நேரம் பார்த்து உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பர். கவனம். ஆடம்பரச்செலவு தவிர்க்கவும். வாகன பராமரிப்பு செலவு உயரும். புத்திரர்கள் சில விஷயங்களில் பிடிவாதம் கொள்வர். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் மனதில் உங்கள் மீதான நல்ல அபிப்பிராயம் குறையாமல் பார்த்துக் கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் இடையூறு வந்து விலகும். பணியாளர்கள் வேலையில் தவறு வராமல் கவனமாக இருக்கவும். பெண்கள் குடும்ப ஒற்றுமையை பாதுகாக்க போராடுவர். மாணவர்கள் படிப்பில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: 9.11.15 இரவு 11:07 மணி முதல் 12.11.15 காலை 10:01 மணி வரை

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

Leave a Reply