shadow

download

நண்பரின் சொல்லுக்கு மரியாதை தரும், மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டில் சுக்கிரன், ஆறில் ராகு அனுகூல அமர்வில் உள்ளனர். பேசும் வார்த்தை வசீகரமாக இருக்கும். புதியவர்களின் அன்பு, உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் சராசரி பயன்பாடு பெறுவீர்கள். புத்திரர் வகையில் புதிய செலவினம் ஏற்படலாம். இடையூறு தந்த விஷயங்களில் சில மாற்றம் உருவாகும். இல்லறத்துணையின் அறிவார்ந்த செயல், அதிர்ஷ்டகரமான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு உற்பத்தி, விற்பனை அளவை சீராக்கும். பணியாளர்கள், அதிக பொறுப்புணர்வு பின்பற்றவும். பெண்கள், குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், நன்கு படித்து நன்மதிப்பு பெறுவர்.\

சந்திராஷ்டமம்:
7.4.15 இரவு 10:25 மணி முதல் 10.4.15 அதிகாலை 5:03 மணி வரை.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபடுவதால், வாழ்வில் சகல வளமும் கிடைக்கும்.

அறிவுத்திறனை உரிய வகையில் பயன்படுத்தும், ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன், கேது அனுகூலமாக உள்ளனர். பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். முகத்தில் சந்தோஷ பொலிவு நிறைந்திருக்கும். அரசு உதவி கிடைக்க அனுகூலம் உண்டு. உடன்பிறந்தவர்களின் தேவைக்கு உதவுவீர்கள். சிலர் வீடு, வாகனம் வாங்குகிற முயற்சி நிறைவேறும். புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து அறிவுரை சொல்வீர்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசம் கொள்வார். தொழிலில் மூலதனத் தேவை அதிகரிக்கும். பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பை பயன்படுத்துவர். பெண்கள், கணவரின் எண்ணங்களை செயல்படுத்துவர். மாணவர்கள், ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொள்வர்.

சந்திராஷ்டமம்: 10.4.15 அதிகாலை 5:04 மணி முதல் 11.4.15 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: சனி பகவானை வழிபடுவதால், சிரமமான சூழல் விலகும்.

உற்சாக மனதுடன் பணிபுரியும், மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ராகு – கேது, புதன் தவிர, மற்ற கிரகங்கள் அளப்பரிய நற்பலன் தருவர். வெகுநாள் திட்டம் ஒன்றை செயல்படுத்துவீர்கள். பலவித நன்மையும் கிடைக்கும். தம்பி, தங்கை கூடுதல் பாசம் கொள்வர். வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். புத்திரர் விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள். எதிர்ப்பு விலகி, மனம் உற்சாகம் பெறும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி அதிக நன்மை தரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், புத்தாடை, அணிகலன் வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள், தனித்திறன் வளர்ப்பதில் கவனம் கொள்வர்.

பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவதால், குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பாடுபடும், கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ராகு, புதன், சுக்கிரன் நற்பலன் தருவர். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறும். தாழ்வு மனப்பான்மை விலகும். கால்நடை வளர்ப்பில் லாபம் அதிகரிக்கும். வாகன பயணம் எளிதாக அமையும். எதிர்மறையானவர்களிடம் விலகுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து லாப விகிதம் கூடும். புத்திரரின் செயல்திறன், படிப்பு வளர தேவையான உதவி வழங்குவீர்கள். இல்லறத்துணையின் ஜாதக யோக பலன், குடும்ப நன்மைக்கு துணை நிற்கும். பணியாளர்கள், கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள், குடும்ப உறுப்பினர் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், விரும்பிய பொருளை வாங்க அனுகூலம் உண்டு.

பரிகாரம்: காமதேனுவை வழிபடுவதால், செல்வ வளம் அதிகரிக்கும்.

சமூகப் பணிபுரிவதில் ஆர்வம் கொண்ட, சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் தவிர, மற்ற கிரகங்கள் எதிர்மறையான பலன் தருவர். வாழ்வு முறை சீராக அமைந்திட, பூர்வ புண்ணிய நற்பலனும், அறம் நிறைந்த செயல் மட்டுமே உதவும். பேசுவதில் நிதானம் வேண்டும். வாகனத்தில் மித வேகம் நல்லது. தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். புத்திரரின் விருப்பம் நிறைவேற்ற, கூடுதல் பணம் செலவாகும். எதிரியின் பரிகாச செயலை சகித்துக் கொள்வது நல்லது. இல்லறத்துணையின் நம்பிக்கைக்கு உரியவராக எண்ணம் வளருங்கள். பணியாளர்களுக்கு, பணத்தேவை அதிகரிக்கும். பெண்கள், உடல்நலத்தில் கவனம் கொள்ளவும். மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்:
முருகப் பெருமானை வழிபடுவதால், எதிரியினால் உருவான தொல்லை விலகும்.

உறவினரின் அன்பை மகிழ்வுடன் ஏற்கும், கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு ராகு – கேது, சூரியன் தவிர, மற்ற கிரகங்கள் அனுகூல பலன் தருவர். மனம், செயல்களில் உற்சாகம் நிறைந்திருக்கும். நல்லோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். எதிரியால் வருகிற கெடு செயல் பலமிழக்கும். இல்லறத்துணை, கூடுதல் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் லாப விகிதம் கூடும். பணியாளர்கள், பணம் சேமிப்பர். பெண்கள், மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள், நன்றாக படித்து பாராட்டு, வெகுமதி பெறுவர்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால், பலவித நன்மையும் கிடைக்கும்.

லட்சிய நோக்கத்துடன் பணிபுரியும், துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சூரியன், கேது, சந்திரன் அதிக நற்பலன் தருவர். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். நிகழ்வுகள் அனுகூலம் தருவதாக அமையும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். எதிரியால் இருந்த தொல்லை விலகும். புத்திரரை, விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்த சொல்லுங்கள். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணியாளர்கள், கடமை உணர்ந்து செயல்படுவர். பெண்கள், உறவினர் குடும்ப சுப நிகழ்ச்சிக்கு உதவுவர். மாணவர்கள், அறிவுத்திறனில் மேம்படுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்யும், விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு செவ்வாய், புதன், குரு, ராகு அளப்பரிய வகையில் நற்பலன் தருவர். மனதில் நல்ல சிந்தனை வளரும். உற்சாகமுடன் பணிபுரிவீர்கள். கடந்த கால நற்செயல்களின் பலன் வந்து சேரும். வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். பணக்கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். புத்திரர், நண்பர்களிடம் அதிருப்தி கொள்வர். உங்களின் ஆறுதல், தைரியம் வளர்க்கும். இல்லறத்துணையிடம், உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழிலில் வருகிற இடையூறை தாமதமின்றி சரி செய்யவும். இயந்திரப்பிரிவு பணியாளர்கள், பாதுகாப்பில் அதிக கவனம் வேண்டும். பெண்கள், பணச்செலவில் சிக்கனம் பின்பற்றவும். மாணவர்கள், வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்க்கவும்.

பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடுவதால், சந்தோஷம் நிறைந்த வாழ்வு அமைந்திடும்.

ஆதாயம் பெறுவதில் நியாயமாக செயல்படும், தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, நவக்கிரகங்களில் சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவார். நல்ல செயல்களால் வாழ்க்கை முறையை சீராக அமைத்துக் கொள்ளலாம். புதிய திட்டம் துவக்குவதில் தாமதம் இருக்கும். இடம் அறிந்து பேசுவதால், நற்பெயரை பாதுகாக்கலாம். தாய்வழி உறவினர், சில விஷயங்களில் உங்களிடம் அதிருப்தி கொள்வர். புத்திரரை வழி நடத்துவதில், இதமான அணுகுமுறை வேண்டும். இல்லறத்துணைக்கு, மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை மதித்து நடக்கவும். பெண்கள், ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். மாணவர்கள், பாதுகாப்பற்ற இடங்களில் செல்லக் கூடாது.

பரிகாரம்: அஷ்டலட்சுமி வழிபாடு, வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும்.

ஆன்மிக கருத்துகளில் அதிக நம்பிக்கை கொண்ட, மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு செவ்வாய், ராகு தவிர, மற்ற கிரகங்கள் தாராள அளவில் நற்பலன் தருவர். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு. நிலுவைப் பணம் வசூலாகும். மகளின் ஜாதக யோகம், குடும்பத்தில் சுப நிகழ்வை உருவாக்கும். இல்லறத்துணையின் கூடுதல் அன்பில் மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், புத்தாடை, ஆபரணம் வாங்க நல்யோகம் உண்டு. மாணவர்கள், அறிவுத்திறனில் மேம்படுவர்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபடுவதால், குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும்.

பகைமை குணம் உள்ளவருக்கும் பரிவுடன் உதவும், கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு செவ்வாய், சுக்கிரன், சந்திரன் சிறப்பான பலன்தருவர். அவமதித்தவர் முன், கவுரவம் மிகுந்த வாழ்வு நடத்துவீர்கள். பேசுவதில் நிதானம் இருக்கும். உடன்பிறந்தவர்களால் உதவி உண்டு. வாகனத்தில் அபிவிருத்தி பணி செய்ய பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். புத்திரரின் செயல்குறையை சரிசெய்வீர்கள். இல்லறத்துணை உறுதுணையாக செயல்படுவார். தொழிலில் கூடுதல் உழைப்பு, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பை தவறாமல் ஏற்கவும். பெண்கள், குடும்ப உறவுகளை நன்கு பேணுவர். மாணவர்களின் படிப்புக்கு தேவையான உதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 4.4.15 நள்ளிரவு 12:01 மணி முதல் 5.4.15 பிற்பகல் 2:53 மணி வரை.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால், செயல்களில் நன்மை அதிகரிக்கும்.

புதுமை கருத்துகளை அறிவதில் ஆர்வமுள்ள, மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், குரு, சந்திரன் நற்பலன் தருவர். சுயகவுரவம் பாதுகாத்திடுவீர்கள். புதிய யுக்தியினால், முக்கிய பணி நிறைவேறும். தங்கையின் பாசமும், பரிவும் நெகிழ்ச்சி தரும். வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். பகைமை குணம் உள்ளவரிடம் விலகுவது நல்லது. புத்திரர், உங்கள் சொல்லை வேதமாக பின்பற்றுவர். இல்லறத்துணை, உங்கள் நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் புதியவர்களின் வருகையால் செழிக்கும். பணியாளர்கள், கடமையை உணர்ந்து செயல்படுவர். பெண்களுக்கு, உறவினர்களின் வாழ்த்து, பாராட்டு கிடைக்கும். மாணவர்கள், படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 5.4.15 பிற்பகல் 2:54 மணி முதல் 7.4.15 இரவு 10:24 மணி வரை.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

Leave a Reply