shadow

மக்கள் வேண்டாம் என்றால் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த தயார். எச்.ராஜா

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தொடங்க முயற்சிக்கும் நிலையில் இந்த திட்டத்தால் விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் என்பதால் அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தமிழக பாஜக தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் ஒரு நகரத்தை தியாகம் செய்வது தவறில்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இல.கணேசனின் கருத்துக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையி பாஜகவின் இன்னொரு முக்கிய தலைவரான ர் ஹெச்.ராஜா தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். எந்த திட்டம் வந்தாலும் ஆதாரமில்லாமல் பொய் பரப்பப்படுகிறது என்றும்,  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்தது போல் சில அமைப்புகள் நெடுவாசலிலும் ஊடுருவி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மக்கள் வேண்டாம் என்றால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட தயார் என்றும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Leave a Reply