மீண்டும் அமெரிக்காவை தாக்குவோம். ஐ.எஸ்.ஐ.எஸ் ரிலீஸ் செய்த அதிர்ச்சி வீடியோ
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுர தாக்குதலில் சுமார் 3000 அமெரிக்கர்கள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பின்லேடனின் அல்கொய்தா அமைப்பு காரணம் என அமெரிக்கா முடிவு செய்து பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை சுட்டு வீழ்த்தி பழிவாங்கியது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இரட்டை கோபுர தகர்ப்பு நிகழ்ந்த 14வது ஆண்டு நினைவு தினம் அனுசரித்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் திடுக்கிடும் வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்துள்ளது.
10 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் வெடிகுண்டுகள் அடங்கிய கார்களுடன் அமெரிக்காவில் மீண்டும் தற்கொலை தாக்குதல் நடத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு முஸ்லீமும் அமெரிக்கர்களையும், கிறிஸ்துவர்களையும் எதிர்க்கின்றது என்ற வாசகங்களும் கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் பின்லேடன் உட்கார்ந்திருப்பது போன்றும், அவனுக்கு பின்னால் இரட்டை கோபுர கட்டிடங்கள் தகர்ந்து எரிவதையும் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகவேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ ரிலீஸுக்கு பின்னர் அமெரிக்கா நாடு முழுவதிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
//www.youtube.com/watch?v=G6Cvq253nNM
Leave a Reply
You must be logged in to post a comment.