shadow

இந்தியா எங்களை முந்திவிட்டது என்பது உண்மைதான். முதல்முறையாக ஒப்புக்கொண்ட சீனா

இந்திய விண்வெளித்துறையான இஸ்ரோ எங்கள் நாட்டின் விண்வெளித்துறையின் வளர்ச்சியைவிட அதிகமாக இருப்பது உண்மைதான் சீனா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

ஆசிய நாடுகளில் அனைத்து துறைகளின் வளர்ச்சியில் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் கடும்போட்டியில் உள்ளது. இருப்பினும் சீனாதான் ஏற்றுமதி உள்பட பல துறைகளில் உலக அளவில் முன்னேறி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இந்தியா சாதனை செய்தது. இந்த சாதனையை உலகமே வியந்து நோக்கி வரும் நிலையில்  விண்வெளி துறை வர்த்தகத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் முந்திச் செல்கிறது என்று சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது: ஸ்ரோ அமைப்பு அண்மையில் 104 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது. இதில் 96 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. மிகக் குறைவான கட்டணம் என்பதால் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவை உலக நாடுகள் நாடுகின்றன.

சீன விண்வெளி நிறுவனம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அதிக கட்டணம் நிர்ணயித்திருப்பதால் வர்த்தகத்தில் மிகவும் பின்தங்கியுள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் இருந்து சீனா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply