பாகிஸ்தான் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் மலாலாவுக்கு நோபல் பரிசு கொடுத்ததற்காக பழிவாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது வெறும் டிரைலர்தான் இனிமேல்தான் கடுமையான தாக்குதல் நடத்தவிருப்பதாகவும் தலிபான்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஒரு தீவிரவாதி பள்ளிக்குள் நுழைந்தவுடன் ஒரு குறிப்பிட்ட வகுப்பறையில் நுழைந்து அந்த வகுப்பில் இருந்த 60 மாணவர்களின் கண்முன்னே அந்த வகுப்பின் ஆசிரியரை உயிரோடு கொளுத்திய கொடுமையான சம்பவமும் நடந்ததாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன், மனித குலத்தின் கருப்பு நாள் இது’ என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.