சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் “நடப்பு சாம்பியன்’ இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் இளம் வீரர் கார்ல்சன், மோதுகின்றனர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின், முதல் நான்கு சுற்று “டிரா’ ஆனது. 5, 6வது சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்று, 4-2 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றார். 2 புள்ளிகள் பின்தங்கிய ஆனந்துக்கு நெருக்கடி அதிகரித்தது.

2 மணி நேரம், 7 நிமிடங்கள் நடந்த, ஏழாவது சுற்று முடிவில் ஆனந்த் 2.5, கார்ல்சன் 4.5 புள்ளிகள் பெற்றுள்ளனர். இன்று எட்டாவது சுற்று போட்டி நடக்கிறது.

இன்னும் மீதமுள்ள 5 சுற்றில், கார்ல்சன் 3 முறை வெள்ளை காய்களுடன் விளையாடுவார். இதில் நான்கு சுற்றில் “டிரா’ செய்தால், 6.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்று விடலாம். அதேநேரம், ஆனந்த்துக்கு வரும் 5 சுற்றில், எப்படியும் 2 வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply