சண்டக்கோழிக்கு பதிலாக சவரக்கத்தியை கையில் எடுக்கும் விஷால்
‘மருது’ படத்திற்கு பின்னர் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்கவிருந்த விஷால், அந்த படத்தை திடீரென டிராப் செய்துவிட்டதால் தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது ‘சவரக்கத்தி’ என்ற படத்தை தயாரித்து நடித்து வரும் மிஷ்கின் சமீபத்தில் விஷாலை சந்தித்து கூறிய ஒன்லைன் கதை விஷாலுக்கு பிடித்துவிட்டதால் நானே இந்த படத்தை தயாரித்து நடிக்கின்றேன் என்று கூறிவிட்டாராம். இதனால் மிஷ்கின் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தின் நாயகி மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மிஷ்கின் பாணியில் உருவாகவுள்ள இந்த த்ரில்லர் படம் ஒரு வெளிநாட்டு படத்தின் கதையை அடிப்படையாக கொண்டது என்றும் வதந்தி உருவாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.