shadow

நிச்சயம் பதிலடி கிடைக்கும்: விஷால் ஆவேசம்

நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. குறிப்பாக தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்ததால் பல மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் ஒரு மாணவரின் தந்தை மற்றும் ஒரு மாணவியின் தந்தை ஆகியோர்களும் நேற்று மரணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கு செய்துள்ள துரோகம் குறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டரில் கூறியதாவது: ‘இன்று நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது வாழ்த்துகள். கடும் மன உளைச்சலுக்கும் அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத்துவக் கனவுக்காக என் தம்பி, தங்கைகள் இந்தத் தேர்வை எழுதியிருக்கிறார்கள்.

நீட் தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறி கொடுத்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை ஒரு மருத்துவராக்கி கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் கடமை. கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அதற்கான உதவிகளை செய்யத் தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply