விஜய் நடித்த கத்தி திரைப்படமும், விஷால் நடித்த பூஜை திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரே நாளில் விஜய், விஷால் படங்கள் மோதுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரே நாளில் இரு நடிகர்களின் பாடல்களும் வெளியாகவிருப்பதால் அந்த பரபரப்பு சற்று அதிகரித்திருப்பதாகவும், விஷால் உண்மையிலேயே விஜய்யுடன் போட்டி போட முயற்சிக்கின்றாரா? அல்லது எல்லாம் தற்செயலாக நடைபெறுகிறதா? என்பது புரியாமல் கோலிவுட்டில் பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த தீபாவளி தினத்தில் கத்தி, பூஜை ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுமே நல்ல கலெக்ஷனை கொடுத்த நிலையில் மீண்டும் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விஜய் நடித்த புலி திரைப்படமும், விஷால் நடித்த ‘பாயும் புலி திரைப்படமும் மோதுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் அதே தேதியில் தன்னுடைய ‘பாயும் புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த விஷால் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சரத்குமாருடன் நடிகர் சங்க விவகாரம் குறித்து நேருக்கு நேர் மோதி வரும் விஷால், விஜய்யுடனும் மறைமுக யுத்தத்தை ஆரம்பித்துவிட்டாரோ? என பலர் சந்தேகம் கொண்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.