பூங்கொத்து தயாரிப்பாளர்களுக்கு விஷால் எதிரியா?
விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ படத்தின் பாடல் வெளியீட்டு நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த படத்தின் பாடல்களை வேந்தர் மூவீஸ் நிறுவனர் பார்வேந்தர் வெளியிட்டார்.
இந்த பாடல் வெளியீட்டு விழாவே மிகவும் வித்தியாசமாக நடந்தது. பொதுவாக இதுபோன்ற விழாவுக்கு வரும் விருந்தினர்கள் அனைவருக்கும் பூங்கோத்து கொடுத்து வரவேற்பு செய்வது வழக்கம். ஆனால் இந்த விழாவில் பூங்கோத்துக்கள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை.
அதற்கு இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால் கூறியபோது, “இந்த விழாவுக்கு வந்திருக்கும் விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு ஆகும் செலவில் இரண்டு ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவு செய்யலாம் என்று படக்குழுவினர் முடிவெடுத்தோம். அதனால் யாருக்கும் பூங்கொத்து வழங்கப்படவில்லை. இதற்காக என்னை பூங்கொத்து தயாரிப்பாளர்க்ளின் எதிரி என நினைத்துவிட வேண்டாம். கேரளாவில் தெருநாய்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் நான் கேரளாவுக்கே எதிரி போன்று அரசியல் ஆக்கிவிட்டனர். வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுத்தது தவறா? மேலும் எனக்கு அரசியல் ஆர்வமும் இல்லை, விளம்பர நோக்கமும் இல்லை’ என்று அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.