விஷால் தற்போது ‘பூஜை’ படப்பிடிப்பிற்காக காரைக்குடியில் தங்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு முடித்து விட்டு ஓட்டலில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள டிவியில் ‘வடகறி’ மற்றும் ‘உன் சமையலறையில்’ ஆகிய படங்கள் கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பாவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்’
உடனடியாக காவல்துறையினர் துணையோடு காரைக்குடியில் உள்ள கேபிள் டிவி அலுவலகம் சென்று கேபிள் ஆபரேட்டரை கையும் களவுமாக பிடித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த கேபிள் ஆபரேட்டர் இதுபோன்று பல படங்களை ரிலீஸான சில நாட்களில் கேபிள் டிவியில் போடுவதாக தெரிய வந்தது.
போலீஸார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் அந்த கேபிள் டிவி அலுவலகம் சீல் வைத்து மூடப்பட்டது. வடகறி, உன் சமையலறையில் ஆகிய இரண்டு படங்களுக்கும் விஷாலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை எனினும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் இன்னொரு தயாரிப்பாளரின் படைப்பு திருடப்பட்டதை அறிந்தவுடன் ஆவேசமடைந்து தானே களத்தில் இறங்கியது கண்டு திரையுலகினர் விஷாலை பாராட்டி வருகின்றனர். விஷால் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்கின்றார் என்பதையே இந்த சம்பவம் காட்டுகின்றது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1kOvd14″ standard=”//www.youtube.com/v/luzPSJ-_IJ4?fs=1″ vars=”ytid=luzPSJ-_IJ4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep2111″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.