பரவை முனியம்மாவுக்கு போட்டி போட்டு உதவி செய்யும் விஷால்-சரத்குமார்?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை இன்னும் இரண்டு மாதங்களில் நடத்த வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் பார்வையாளராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்களை நியமனம் செய்துள்ளது. இதனால் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவிருப்பதால், சரத்குமார் மற்றும் விஷால் தரப்பினர் நடிகர்களிடம் பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர்.
இந்நிலையில் ‘தூள்’ படத்தில் ஏ சிங்கம் போல’ என்று தொடங்கும் பாடலை பாடிய பரவை முனியம்மா உடல் நலமின்றி இருப்பதாகவும், அவர் தன்னுடைய மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் கேள்விப்பட்ட நடிகர் விஷால் உடனடியாக மதுரையில் உள்ள நவீன மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கவும் அதற்கு தேவையான மொத்த செலவையும் தான் ஏற்பதாகவும் அறிவித்துள்ளார். இது நடிகர்கள் மத்தியில் விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள சரத்குமார் தரப்பு உடனடியாக பரவை முனியம்மாவுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகையை நடிகர் சங்கத்தில் இருந்து வழங்குவதாக அறிவித்துள்ளது. சரத்குமார்-விஷால் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த போட்டியால் பரவை முனியம்மாவுக்கு இரட்டிப்பு லாபம் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.