shadow

 fireworksவிருதுநகர் மாவட்டம் காரசேரியில் முறையான லைசென்ஸ் இல்லாமல் முறைகேடாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிப்பின் போது நடந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விருதுநகர் அருகே உள்ள காரிச்சேரியில் பட்டாசு ஆலை ஒன்று கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள கட்டடத்தில் இதே பட்டாசு ஆலையின் கிளை ஒன்று முறையான லைசென்ஸ் இல்லமல் முறைகேடான வகையில்  பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த முறைகேடான பட்டாசு ஆலையில் நேற்று பட்டாசு மற்றும் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து நாசமாகின.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply