shadow

59th_south_indian_filmfare_awards_2011_photos_stills_4546ce3

 

கோலி சோடா வெற்றி படத்தை அடுத்து இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கின்றார். இந்த படத்திற்கு ‘இடம் மாறி இறங்கியவன்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் தற்போது “ஐ” படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். மேலும் அவர் தரணி இயக்கத்தில் ‘ராஸ்கல்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துடன் விஜய் மில்டன் படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார்.

‘இடம் மாறி இறங்கியவன்” படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தனது பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும், கோலி சோடாவில் நடித்த சிறுவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் விஜய் மில்டன் கூறுகிறார். மனநிலை சரியில்லாத கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். அவருக்கு வழிகாட்டும் சமூக சேவை பெண்ணாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நடந்து வருகிறது.

Leave a Reply