விஜய்யின் ‘தெறி’ படத்தின் தெலுங்கு டைட்டில் என்ன தெரியுமா?
இளையதளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தெறி’ படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. சென்னையில் உள்ள ஒரு டப்பிங் தியேட்டரில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விஜய்க்கு வாசு என்ற டப்பிங் ஆர்ட்டிஸ்ட் குரல் கொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இவர்தான் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களின் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு விஜய்க்காக குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் “போலீஸ் ஓஹ்டு” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ போஸ்டர் இன்று பிற்பகல் 3மணிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ள கேரள மாநிலத்திலும் இந்த படம் வேறு டைட்டிலில் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறாது. ஏனேனில் தெறி’ என்றால் மலையாளத்தில் கெட்டவார்த்தை என்பதால் வேறு டைட்டில் வைக்கப்படவுள்ளதாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.