முதல்வர் ஜெயலலிதாவுடன் விஜயதாரிணி திடீர் சந்திப்பு. அதிமுகவில் சேருவாரா?
காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட விஜயதாரிணி எம்.எல்.ஏ இன்று சட்டப்பேரவை முடிந்தவுடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜயதாரிணி விரைவில் அதிமுகவில் சேருவாரா? என்பது குறித்த கேள்விகளை இந்த சந்திப்பு எழுப்பியுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து விஜயதாரிணியிடம் செய்தியாளர்கள் கேட்டபொது, “முதல்வரிடம் தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காகவே சந்திதேன் என்று மட்டும் கூறினார். மேலும் அவர் கூறியபோது, ‘என் பதவி பறிக்கப்பட்டது அநீதியாகும். என் நீக்கம் தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் விளக்கம் கேட்டுள்ளேன். அவர்கள் சொல்லும் பதிலுக்கேற்பவே, என் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு விஜயதாரிணி கூறியதில் இருந்தே அவர் விரைவில் அதிமுகவில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.