shadow

ஜெயலலிதா போலவே 9ஆம் நம்பர் செண்டிமெண்டில் விஜயகாந்த்
vijayakanth
ஜெயலலிதா போன்று முதல்வர் பதவியை பிடிக்க ஜெயலலிதா போலவே ஒன்பதாம் நம்பரை தனது ராசியான நம்பராக விஜயகாந்த் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தேமுதிகவின் பொதுக்குழு வரும் 9-ம் தேதி, காலை 9 மணிக்கு பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே, ஜே.கே.மகால் மண்டபத்தில் நடைபெறும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சரியாக 9.09க்கு பேச ஆரம்பிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு ஒன்பதாம் நம்பர் ராசியானது என்பது அனைவரும் அறிந்ததே. இதேபோல் விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என்றால் ஒன்பதாம் எண்ணை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பதாகவும், அதன்படியே இந்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பொதுக்குழு முடிந்ததும் பகல் 1 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் இதில் விஜயகாந்த் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிப்பார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்கள் முன் விஜயகாந்த் துப்பி பரபரப்பை ஏற்படுத்தியபின்னர் மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply