தமிழக சட்டமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்களுக்காக குரல் கொடுத்த திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தின் தொடர் முழுவதும் தேமுதிக எம்.எல்.ஏக்களை இடைநீக்கம் செய்வதாக சமீபத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் தேமுதிக உறுப்பினர்களுக்கு ஆதரவாக நேற்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குரல் கொடுத்தன. இதுகுறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் நலனுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து பணியாற்ற தேமுதிக உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததோடு, வெளிநடப்பிலும் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தேமுதிக சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்’ என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.