கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பரும் பிரபல தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை உள்பட பல வெற்றி படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக சிலகாலம் இருந்த ராவுத்தர் கடைசியாக “புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம்” என்ற படத்தை தயாரித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இப்ராஹிம் ராவுத்தர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கோமா நிலையில் இருந்த அவரை நண்பர் விஜயகாந்த் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். “நண்பா நீ எழுந்து வருவாய்” என்று உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராவுத்தர் இன்று காலை காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் ராவுத்தர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.