shadow

மீண்டும் நாக்கை துருத்தினார் விஜயகாந்த். பாதுகாப்பாளருக்கு விழுந்த அடி உதை.
vijayakanth1
விஜயகாந்த் இன்னும் சினிமா ஹீரோ நினைப்பில் இருந்து மாறவில்லை என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்கள் மற்றும் பாதுகாவலரை நாக்கை துருத்தி மிரட்டியதோடு அடிக்கவும் கை ஓங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சேலத்தில் இன்று நடைபெறும் தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தார்.

விஜயகாந்த் காரில் இருந்து இறங்கியதும் பத்திரிகையாளர்கள் அவரிடம் மைக்கை நீட்டி கேள்வி கேட்டனர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த விஜய்காந்த் பத்திரிகையாளர்களை நோக்கி நாக்கை துருத்தி மிரட்டியதுடன் அடிக்கவும் கையை ஓங்கினார்.

மேலும் தன்னை பாதுகாப்பாக அழைத்து சென்ற பாதுகாவலரையும் விஜயகாந்த் நாக்கை துருத்தி அவரை தாக்கியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்தின் பக்குவமற்ற, நாகரீமற்ற அரசியலை சமூக வலைத்தளங்களில் பலர் கண்டித்து வருகின்றனர்.

vijayakanth

Leave a Reply