பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவிற்கும், பாமகவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே கருத்துவேறுபாடு இருந்து வருகிறது. தொகுதி உடன்பாட்டின்போது இரு கட்சிகளும் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுத்ததால் பெரும் பிரச்சனை உண்டாகியது. ஒருவழியாக தொகுதி உடன்பாடு முடிந்தும் இரு கட்சிகளின் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
பாமக போட்டியிடும் தொகுதிகளில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வதை தவிர்த்து வந்தார்.மேலும் புதுச்சேரியில் தன்னுடைய கட்சி கொடியையோ அல்லது தன்னுடைய படங்களையோ பாமக பயன்படுத்த கூடாது என அறிக்கையும் விட்டிருந்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவை தைலாபுரம் வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்க அன்புமணி ராமதாஸ் முயற்சி செய்துவருகிறார். வரும் 12ஆம் தேதி ராமதாஸ் வீட்டில் விஜயகாந்த்திற்கு விருந்து வைக்கப்படும் என கூறப்படுகிறது. ஆயினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.